செல்வ மழையில் நனைய செய்ய வேண்டிய பரிகாரம்

mahalashmi5
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே பணத்தின் மீது ஆசை இருக்கும். ஏனென்றால் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்தால் மட்டும் தான் ஒரு மனிதனால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடிகின்றது. இந்த பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, பணம் சம்பாதிக்க, தினம் தினம் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றோம்.

ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய தேவைக்கு ஏற்ப பணமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை இந்த மனிதனுடைய மனம் திருப்தி அடைவதே இல்லை. இன்னும் இன்னும் பணம் தேவை என்று வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களையும் தொலைத்து விட்டு பணத்தின் பின்பு ஓடுகின்றோம்.

- Advertisement -

இப்படி ஓடி ஓடி சம்பாதித்த பணம் நிலையாக உங்களிடமே தங்க வேண்டுமா, வறுமையில் இருந்து விடுபட வேண்டுமா, வராத பணத்தையும் உங்கள் வீடு தேடி வர வைக்கும் பரிகாரம் தான் இது. மகாலட்சுமியின் அருள் ஆசியை முழுமையாக பெற செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

பணம் தரும் தாமரை பூ பரிகாரம்

வியாழக்கிழமை இரவு 3 தாமரை பூ வாங்கிக் கொள்ளுங்கள். செந்தாமரை வெண் தாமரை எது கிடைத்தாலும் சரி, இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் கொஞ்சம் பன்னீரை ஊற்றி இந்த தாமரை பூவை அந்த தண்ணீரில் போட்டு வைத்து விடவும்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்தவுடன் தாமரை பூவை எல்லாம் எடுத்து பத்திரமாக வைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் போட்டு வைத்த தாமரையை நீங்கள் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு வைத்து பூஜை செய்யலாம் தவறு கிடையாது. இரவு முழுவதும் தாமரைப் பூ இருந்த தண்ணீர் இருக்கும். அதை மட்டும் வைத்து தான் இப்போது பரிகாரத்தை செய்யப்போகிறோம்.

வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் வழக்கம் போல தலைக்கு குளித்து விடுங்கள். சோப்பு ஷாம்பு எது போட்டு குளிக்கிறீர்களோ, அது உங்களுடைய விருப்பம். குளித்து முடித்துவிட்டு இறுதியாக இந்த தாமரை பூ தண்ணீரை எடுத்து வைத்திருக்கின்றோம் அல்லவா. அதை உங்களுடைய தலையின் மீது ஊற்றிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி இந்த தாமரை தீர்த்தத்தில் குளிக்கும் போது மகாலட்சுமியை மனதார நினைத்துக் கொண்டு, என் உடம்பை பிடித்த தரித்திரம் நீங்க வேண்டும், மகாலட்சுமியின் அருள் ஆசி முழுமையாக கிடைக்க வேண்டும், என்ற வேண்டுதலோடு இந்த தீர்த்தத்தில் தலைக்கு குளித்துவிட்டு வரவேண்டும். தொடர்ந்து 7 வாரம் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் எல்லாம் விலகி, உங்களுடைய செல்வ வளம் மேலும் மேலும் உயர்வதை பார்க்க முடியும். தாமரைப் பூவில் வாசம் செய்பவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து ஏழு சுக்கிர ஹோரை.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

மகாலட்சுமியின் அம்சமும் சுக்கிரனின் நேரமும் ஒன்றாக சேரும்போது இந்த தாமரைப் பூ தீர்த்தத்தில் நீங்கள் குளிக்கும் நேரம் உங்களுக்கு நிச்சயம் நல்ல காலம் பிறந்து விடும். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -