வீட்டில் அட்சய பாத்திரத்தில் பூக்களை வைக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படி என்றால் அதனுடன் இன்னும் சில பொருட்களை சேர்த்துப்பாருங்கள். வீட்டில் செல்வமழை பொழிய ஆரம்பித்து விடும்.

uruli money
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பல வீடுகளிலும் அதேசமயம் பெரிய பெரிய கடைகள், நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் வரவேற்பு அறையில் ஒரு அக்ஷய பாத்திரத்தை வைத்து அதில் முழுக்க நீர் நிரப்பி வண்ண வண்ண பூக்களை போட்டு அலங்கரித்து வைப்பார்கள். இது அலங்காரத்திற்காக மட்டும் அல்லாமல் அதில் மிகப்பெரிய சூட்சுமமும் நிறைந்திருக்கிறது. மேலும் அதில் இன்னும் சில பொருட்களை சேர்க்கும் பொழுது அந்த அக்ஷயா பாத்திரம் இருக்கும் இடத்தில் செல்வமலை பொழியும். அந்த பொருட்கள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அக்ஷய பாத்திரம் என்பது அள்ள அள்ள குறையாத பாத்திரம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அக்ஷய பாத்திரத்தில் இருந்து நாம் எந்த பொருட்களை எடுத்தாலும் அந்த பொருட்கள் குறையாமல் மீண்டும் நிரப்பி கொண்டே இருக்கும் என்று புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் தான் அக்ஷய பாத்திரம் என்பது குபேரருக்குரிய பாத்திரமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அக்ஷய பாத்திரத்தில் நாம் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் நம் வீட்டில் செல்வநிலை உயரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் அக்ஷய பாத்திரத்தை முறையாக பராமரிப்பது இல்லை. காரணம் அதில் இருக்கும் தண்ணீரை வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மாற்றுவது. மேலும் சுத்தமான தண்ணீரை உபயோகிக்காமல் ஏதாவது ஒரு தண்ணீரை ஊற்றி வைப்பது. அடுத்ததாக அதில் போடப்படும் மலர்கள் இயற்கையான மலர்களாக இல்லாமல் செயற்கையான பிளாஸ்டிக் மலர்களை போட்டு வைப்பது என்று அதன் புனித தன்மையையே கெடுத்து விடுகிறார்கள். இந்த பதிவில் முறையாக எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதனால் ஏற்படும் பலனையும் புரிந்து செயலாற்றலாம்.

சுத்தம் செய்யப்பட்ட அட்சய பாத்திரத்தில் சுத்தமான குடிக்கும் நீரை தான் பிடிக்க வேண்டும். பிறகு அதனுடன் பன்னீரை நாம் ஊற்ற வேண்டும். அடுத்ததாக அதில் நாம் சில ஏல அரிசியை அதாவது ஏலக்காய் விதையை போட வேண்டும். பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை போட்டு, அதற்கு மேல் பன்னீர் ரோஜாக்களையோ அல்லது மல்லிகை பூவையோ போட்டு வைக்க வேண்டும். குறிப்பு வாசனை உள்ள மலர்களை தான் அதில் உபயோகப்படுத்த வேண்டும்.

- Advertisement -

இந்த பாத்திரம் வீட்டின் வடகிழக்கு மூலையிலோ அல்லது வரவேற்பு அறையிலோ வைக்க வேண்டும். இதில் இருக்கும் நீரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பழைய நீரையும், பூக்களையும் செடிகளில் ஊற்றி விட வேண்டும். முக்கியமான விஷயம் கால்படாத இடமாக இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: முருகன் வழிபாட்டிற்கு அற்புத நாளாக நாளை (05.09.2023) திகழப் போகிறது. இந்த நாளை தவிர விடாமல் முருகனை இப்படி வழிபட்டால் அந்த முருகனே குழந்தையாக உங்கள் வீட்டில் தவழ்வான்.

இவ்வாறு செய்வதன் மூலம் நம் வீட்டில் குபேரர், மகாலட்சுமி போன்றவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து, செல்வ நிலை உயரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -