செல்வ செழிப்பை பெற வெள்ளிக்கிழமை பரிகாரம்

mahalashmi8
- Advertisement -

பெரும்பாலும் நாம் எல்லோருடைய வேண்டுதல் என்னவாக இருக்கிறது. குடும்பம் செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வாழ வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் எக்காரணத்தைக் கொண்டும் கடன் மட்டும் நுழைந்து விடக்கூடாது. ஆரோக்கியம் கெட்டுப் போகக்கூடாது. இப்படிப்பட்ட வேண்டுதல் எல்லாம் நிறைவேறி விட்டாலே போதும். ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கும்.‌ இதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

செல்வ செழிப்பை தரும் பரிகாரம்

ஒட்டுமொத்த மகாலட்சுமி அம்சமும் பசுவிடம் இருக்கிறது. உங்க வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய நாட்டு பசு மாடு வைத்திருப்பவர்களிடம் சொல்லி பசு நெய் கொஞ்சம் வாங்கிக்கோங்க. வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையிலேயே மகாலட்சுமிக்கு பூஜை செய்து முடித்துவிட்டு, சமைக்க தொடங்குங்கள்.

- Advertisement -

பச்சரிசி சாதம், துவரம் பருப்பு வேகவைத்து கடைந்து கொள்ளவும், பசும்பாலால் பசு நெய் ஊற்றி செய்த பால் பாயாசம், கருப்பு உளுந்து சேர்த்த உளுந்த வடை, இது எல்லாம் கட்டாயம் இருக்கணும். இது தவிர கூட்டு பொரியல் சாம்பார் அப்பளம் இதை நீங்கள் சேர்த்து சமைத்துக் கொள்ளலாம். வெள்ளிக்கிழமை அன்று ஒன்பது சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அவர்களுக்கு இந்த சாப்பாட்டை பரிமாற வேண்டும்.

வெற்றிலை பாக்கு பூ தாம்பூலத்தோடு இந்த பரிகாரத்தை மனநிறைவோடு நீங்கள் செய்ய வேண்டும். ஒன்பது சுமங்கலி பெண்கள் உங்களுடைய வீட்டில் வெள்ளிக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் மன நிறைவோடு சாப்பிட்டுவிட்டு உங்கள் குடும்பத்தை வாழ்த்தி விட்டு சென்றால் உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமோடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

- Advertisement -

சொந்தக்காரர்கள் தான் கூப்பிடனும். தெரிஞ்சவங்களத்தான் கூப்பிடனும் என்ற எந்த அவசியமும் கிடையாது. ஏழையாக இருக்கக்கூடிய பெண்களை கூப்பிட்டு கூட இந்த அன்னதானத்தை நீங்கள் செய்யலாம். உங்களால் வாராவாரம் இந்த பரிகாரத்தை செய்ய வசதி இருக்கிறது என்றால் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் சொல்லவே முடியாத நல்ல பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனை தீர திருப்பதி லட்டு பரிகாரம்

குடும்ப கஷ்டம் இருக்குது. கடன் சுமை ரொம்ப அதிகமா இருக்குது என்பவர்கள் எல்லாம் ஒரே ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கடன் சுமை குறையும். குடும்ப கஷ்டத்திற்கு எல்லாம் ஒரு விடிவு காலம் பிறந்து விடும் இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -