கடன் பிரச்சனை தீர திருப்பதி லட்டு பரிகாரம்

laddu
- Advertisement -

பத்து வருடம் சிறுக சிறுக பணம் சேர்த்து, பிறகு கட்ட வேண்டிய வீட்டை ஒரே வருடத்தில் கடன் வாங்கி கட்டி விடுகின்றோம். பத்து வருடத்திற்கு பிறகு நடக்கக்கூடிய ஒரு நல்ல காரியம் இன்றே நடந்தால் அது சந்தோஷம்தான். ஆனால் கடன் வாங்கி வைத்திருக்கின்றோமே. இன்று வரக்கூடிய வருமானம் தொடர்ந்து பத்து வருடத்திற்கு நிலையாக வரும் என்று சொல்ல முடியாது.

திடீரென்று குடும்பத்தில் ஏதோ ஒரு கஷ்டம் வந்து விட்டால் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் ரொம்பவும் சிரமப்படுகின்றோம். இப்படி சின்ன சின்ன கடன் முதல், பெரிய கடன் வரை கைநீட்டி வாங்கிவிட்டு இன்று திருப்பி அடைக்க முடியாமல் கஷ்டத்தில் இருப்பவர்களுக்காக இன்று ஒரு விசித்திர பரிகாரத்தை நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். திருப்பதி சாமியை கும்பிட்டால் கடன் தீரும். அது தெரியும். திருப்பதி லட்டு வைத்து கடனை எப்படி அடைப்பது. இதோ இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

கடன் தீர திருப்பதி லட்டு பரிகாரம்

முதலில் இதற்கு நீங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டும். பெருமாளை மனம் உருகி வேண்டுதல் வையுங்கள். பெருமாளே என்னுடைய கடனை எப்படியாவது தீர்த்து வையப்பா என்று பிரார்த்தனை செய்து, திருப்பதி லட்டு வாங்கிக்கோங்க. தேவைக்கு அதிகமாக இரண்டு லட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதை நேராக வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருங்க.

உங்களுக்கு தெரிஞ்சவங்க, உறவினர்கள் யாராவது பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்களாக பாருங்கள். அவர்களுக்கு இந்த திருப்பதி லட்டு வை கொண்டு வந்து பிரசாதமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய கடன் அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

திருப்பதி பெருமாள் காலம் காலமாக குபேரருக்கு வட்டிகட்டி கொண்டு இருக்கிறார் என்பது நாம் எல்லோருக்கும் தெரியும். பல வருடமாக புராணம் இந்த கதையைத்தான் நமக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. குபேரரது நட்சத்திரம் பூரட்டாதி நட்சத்திரம். ஆக பெருமாள் கோவிலில் இருந்து லட்டு வாங்கி வந்து, குபேரர் நட்சத்திரத்தில் பிறந்த பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு உங்கள் கையால் இந்த லட்டை கொடுத்தால் கடன் அடையும்.

லட்டு என்பது சுக்கிரனின் அம்சம் கொண்ட ஒரு பொருள். அந்த லட்டை திருப்பதியில் இருந்து எடுத்து வந்து, நீங்க குபேரர் கையில் கொடுக்குறீங்க. அப்ப குபேரன் மனம் சந்தோஷப்பட்டு உங்களுக்கு பணத்தை கொடுப்பாரா. நிச்சயம் கொடுப்பார். உங்களுக்கு பணம் காசு நிறைய வந்துவிட்டால் வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்களா. நிச்சயம் கொடுத்து விடுவீர்கள்.

- Advertisement -

அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது. ஒரே ஒருமுறை செய்து பாருங்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஒரு லட்டு அதிகமாக வாங்குவீங்க அவ்வளவுதான். இந்த லட்டை தானமாக பெறுபவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை வருமா. நிச்சயமாக கிடையாது.

இதையும் படிக்கலாமே: முன்னோர் சாபம் நீங்க விளக்கு பரிகாரம்

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களிடம் இந்த உண்மையை விளக்கி என் கடன் தீர தான் உனக்கு இந்த லட்டுவை தருகிறேன் என்று சொல்லி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நம்முடைய சுயநலத்திற்காக அடுத்தவர்களை ஏமாற்றி பரிகாரம் செய்யக் கூடாது. பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தாராளமாக இந்த லட்டுவை பிரசாதமாக வாங்கிக் கொள்ளலாம். உங்களுக்கு பெருமாள் ஆசிர்வாதம் கிடைக்கும், குபேரரின் அனுகிரகம் உங்களுக்கும் கிடைக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -