செல்வ வளம் பெருக விளக்கு பூஜை

vilakku poojai
- Advertisement -

இந்த உலகத்துக்கே செல்வ வளத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக விளங்குபவர் மகாலட்சுமி தாயார். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயாரின் கடைக்கண் பார்வை யார் மீது படுகிறதோ அவர்களுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறைவும் இருக்காது என்று கூறப்படுகிறது. அந்த மகாலட்சுமி தாயாரின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு எப்படி எந்த நாளில் திருவிளக்கு பூஜை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருவிளக்கு என்பதை நாம் குத்துவிளக்கு என்று கூட கூறலாம். அனைவரின் இல்லங்களிலும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவு வரை ஏதாவது ஒரு குத்து விளக்குவது இருக்கும். இந்த குத்து விளக்கை கண்டிப்பான முறையில் வீட்டில் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி யார் ஒருவர் வீட்டில் குத்து விளக்கு ஏற்றப்படுகிறதோ அந்த வீட்டில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருப்பார்கள்.

- Advertisement -

அதாவது குடும்ப ஒற்றுமை இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் அந்த குத்து விளக்கின் நுனி, இடை, அடி என்று மூன்று இடங்களிலும் முப்பெரும் தேவர்கள் தங்கள் மனைவியுடன் கூடியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட குத்துவிளக்கை செல்வ வளம் பெருகுவதற்கு எந்த முறையில் என்றைக்கு பூஜை செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

பெரும்பாலும் கோவில்களில் பௌர்ணமி தினங்களில் குத்து விளக்கு பூஜை என்பது நடைபெறும். இந்த பூஜையை நாம் கோவிலில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நாம் மட்டுமோ அல்லது நம் வீட்டை சுற்றி இருக்கும் பெண்கள் சேர்த்து நம் வீட்டிலேயே திருவிளக்கு பூஜையை செய்யலாம். பொதுவாக இந்த திருவிளக்கு பூஜையை வீட்டில் இருக்கும் சுமங்கலி பெண்கள் செய்வது மிகவும் உத்தமமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அதற்காக சுமங்கலி பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? என்று கேட்டால் இல்லை திருமணம் ஆகாத பெண்களோ அல்லது ஆண்களோ, கணவனை இழந்தவர்களோ, குழந்தைகளோ யார் வேண்டுமானாலும் தங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக இந்த திருவிளக்கு பூஜையை தாராளமாக செய்யலாம்.

பௌர்ணமி நாளன்று செய்வதை விட மகாலட்சுமி தாயாருக்குரிய நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் வீட்டில் திருவிளக்கு பூஜையை செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதற்காக நம் வீட்டில் ஒரு குத்துவிளக்கு மற்றும் அர்ச்சனை செய்வதற்காக குங்குமம் அல்லது மல்லிகைப்பூ இருந்தால் போதும்.

- Advertisement -

முதலில் விநாயகரை வணங்கி விட்டு குத்து விளக்கிற்கு மஞ்சள், குங்குமம் இட்டு அதற்கு பூவை சூடி ஐந்து முகங்களிலும் தீபம் ஏற்றி வைத்து சுத்தமான குங்குமத்தை வைத்து 108 முறை மகாலட்சுமி தாயாரின் போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை தினமும் நம்முடைய நெற்றியில் வைத்துக் கொண்டு வர வேண்டும். இப்படி மாதத்தில் ஒரு நாள் அனுஷ நட்சத்திரம் வரும் நாள் அன்று இந்த திருவிளக்கு பூஜையை மேற்கொண்டு வருபவர்களின் இல்லத்தில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் கிடைத்து செல்வ வளம் மேலோங்கும்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்க எளிய வழிபாடு

மிகவும் பெரிதாக எந்தவித செயலும் செய்யாமல் சிறிய செயல்களை செய்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -