பண வரவை அதிகரிக்க எளிய வழிபாடு

vetrilai pakku
- Advertisement -

பணவரவு ஏற்படுவதற்காக கடுமையாக உழைத்தாலும் ஒரு சிலரால் மட்டுமே பணவரவை அதிகரிக்க முடிகிறது. அப்படி பணவரவை அதிகரித்தாலும் ஒரு சிலரிடம் மட்டுமே தான் பணம் தங்குகிறது. கஷ்டப்பட்டு உழைக்கும் பல நபர்களுக்கும் தங்களுடைய உழைப்பிற்கேற்ற பணம் வராமல் போவதும் உண்டு. இப்படி பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து பண வரவை ஏற்படுத்த செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்றால் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை வேண்டுவோர் பல வழிபாடுகள் மேற்கொள்வது, பரிகாரங்கள் செய்வது என்று பல வழிகளில் முயற்சி செய்கிறார்கள். இன்றைய பதிவில் மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளை மட்டுமே நாம் வைத்து மகாலட்சுமி தாயாரை எப்படி வழிபாடு செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாரின் அருள் ஒரு வீட்டில் நிறைந்திருக்க வேண்டும் என்றால் அந்த வீடு சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் காலையில் மாலையிலும் விளக்கேற்றி தூப தீபாராதனை காட்டி வழிபட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அவ்வாறு நாம் வழிபாடு மேற்கொள்ளும் பொழுது மாலை நேரத்தில் தீபம் ஏற்றுவோம் அல்லவா?

அப்பொழுது மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக ஆறு வெற்றிலை மூன்று கொட்டைப்பாக்கு ஒரு நாணயம் அது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று எவ்வளவாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் ஒரு நாணயம் வைத்து விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். மறுநாள் காலையில் எப்போதும் போல் காலை பூஜை செய்யும் பொழுது அந்த வெற்றிலை பாக்கை எடுத்து தனியாக வைத்துக்கொண்டு அதில் வைத்திருந்த நாணயத்தை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

தினமும் நாணயம் வைப்பதாக இருந்தால் ஒரு ரூபாய் நாணயம் மட்டும்தான் வைக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு நாள் ஒரு ரூபாய் வைக்கலாம். ஒரு நாள் இரண்டு ரூபாய் வைக்கலாம். இப்படி நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு நாணயத்தை வைத்தால் போதும். வெற்றிலையை நாமும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது யாராவது வெற்றிலை சாப்பிடபவர்கள் இருந்தால் அவர்களுக்கும் கொடுக்கலாம்.

இப்படி அனுதினமும் நாம் செய்ய வேண்டும். அந்த டப்பா நிறையும் அளவு நாணயம் வந்த பிறகு அந்த நாணயத்தை எடுத்து அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கும் மகாலட்சுமி தாயாரின் உண்டியலிலோ அல்லது பெருமாளின் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து நாம் செய்து வரும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைப்பதோடு மட்டுமல்லாமல் வீட்டில் பண வரவிற்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: அமாவாசை இரவு ஏற்ற வேண்டிய விளக்கு

மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய இந்த வெற்றிலை பாக்கை தினமும் வைத்து முழு நம்பிக்கையுடன் மனதார மகாலட்சுமி தாயாரை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் சகல செல்வமும் கிடைக்கும்.

- Advertisement -