வெந்தயத்துடன் இந்த 1 பொருளை சேர்த்து வைத்தால் வேகமாக பணக்காரர் ஆகிவிடலாம்.

vendhayam
- Advertisement -

புதன் கிரகத்துக்கு உரிய தானியமாக சொல்லப்படும் இந்த வெந்தயத்தை வைத்து செல்வ வளத்தையும், சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய ஒரு சில பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் இருந்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை, பண பிரச்சனை, சண்டை சச்சரவு அத்தனைக்கும் தீர்வினை நம்மால் பெற முடியும். இந்த பரிகாரத்தை செய்யத் தொடங்கிய ஒரு சில நாட்களில் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் அனுபவிக்காத சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள். எதனால் நமக்கு இவ்வளவு நல்லது நடக்கிறது என்று யோசிக்கும் அளவிற்கு பல நன்மைகளை தரக்கூடிய பரிகாரங்கள் இது.

சில பேருடை வீட்டில் எப்போதும் சண்டை போடும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். அந்த வீட்டில் ஒரு அமைதியே இருக்காது. இப்படி சண்டை போட்டுக் கொண்டே இருக்கக்கூடிய வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டால். அதனால் உங்களுடைய வீட்டில் இப்படிப்பட்ட ஒரு சூழல் அமைந்திருந்தால் எப்பாடு பட்டாவது சண்டை வராமல் இருப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள்.

- Advertisement -

சில பேர் வீட்டில் விருந்தாளிகள் வந்து சென்றால் போதும். சண்டை ஆரம்பித்து விடும். இதற்குக் காரணம் வந்தவர்களுடைய கண் திருஷ்டியாக இருக்கும். வருபவர்களுடைய கெட்ட எண்ணமாக இருக்கும். இதை தடுத்து நிறுத்த என்ன செய்வது. வீட்டில் சந்தோஷம் நிலவ இந்த பரிகாரம். ஒரு சிறிய கிண்ணத்தை  எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெந்தயம் – 1 கைப்பிடி அளவு, வெல்லம் – 1 ஸ்பூன், பச்சரிசி – 1 ஸ்பூன், இந்த 3 பொருட்களையும் சேர்த்து கலந்து வரவேற்பறையில் திறந்தபடி ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடலாம். அலமாரிக்கு மேல் பக்கத்தில் கூட வைத்து விடலாம். குறிப்பாக இதை மூடக்கூடாது. இதனுடைய ஆற்றல் எப்போதும் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவது குறையும். பொறாமை எண்ணத்தோடு உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று வீட்டிற்குள் யாராவது வந்து சென்றாலும், அந்த நெகட்டிவ் எனர்ஜியை அழிக்கக்கூடிய சக்தி இந்த பொருட்களுக்கு உண்டு. முயற்சி செய்து பாருங்கள்.

திறந்து வைத்திருக்கும் வெந்தயம் பச்சரிசி வெள்ளத்தை மாதத்திற்கு 1 முறை மாற்ற வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்திய பழைய பொருட்களை காக்கை குருவிகள் எறும்புகளுக்கு சாப்பிட இரையாக போட்டு விடலாம். கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். அல்லது மொட்டை மாடியில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக செல்வ செழிப்பு அதிகரிக்க கடன் குறைய பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சிறிய பச்சை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை வைத்து, ஒரு வெள்ளி நாணயம் அல்லது தங்க நாணயம் அல்லது வெள்ளி ஆபரண நகை அல்லது தங்க ஆபரண நகை, உங்களிடம் எது உள்ளதோ ஒரு குண்டுமணி அளவு நகை இருந்தால் கூட போதும் அதை அந்த வெந்தயத்தில் வைத்து பச்சை துணியை, பச்சை நூலால் முடிச்சாக கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த முடிச்சை உங்களுடைய வீட்டில் அல்லது உங்கள் வீட்டு பூஜை அறையில் எங்காவது ஒரு இடத்தில் சுவற்றில் மாட்டி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு கிண்ணத்தில் போட்டு அலமாரியில் வைக்கலாம். வெந்தயத்தோடு தங்கமும் வெள்ளியும் சேர்ந்து இருக்கும் போது வீட்டில் இருக்கும் பண கஷ்டங்கள் குறைய தொடங்கும். கடன் சுமை குறையும். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுடைய வருமானம் அதிகரிக்கும்.

6 மாதத்திற்கு ஒரு முறை உள்ளே இருக்கும் பழைய வெந்தயத்தை எடுத்து விட்டு காக்கை குருவிகளுக்கு போட்டுவிட்டு, மீண்டும் புதிய வெந்தயத்தை வைத்து கட்டிக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை புதன்கிழமை புதன் ஹோரை அன்று செய்வது மிக மிக சிறப்பான பலன்களை கொடுக்கும். நம்பிக்கையோடு செய்தால் நீங்கள் நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் உங்கள் குடும்பத்தை வந்து அடையும் என்ற இந்த கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -