குங்குமத்தை இதிலிருந்து எடுத்து நெற்றியில் வைத்தால் செல்வம் குவியும்.

mahalashmi3
- Advertisement -

கோடி கோடியாக செல்வம் குவிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவாக இருக்கிறது. ஆனால் ஏனோ தெரியவில்லை. நாம் விரும்பி வேண்டும் என்று கேட்கும் பொருள் நம்மை விட்டு விலகி விலகி செல்கிறது. நீங்கள் விரும்பி கேட்கக்கூடிய பணம், செல்வம் உங்களிடத்தில் நிரந்தரமாக தங்க வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை நினைத்து குங்குமத்தை இதில் போட்டு வையுங்கள்.

தினமும் இதிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டால் மகாலட்சுமி அம்சம் உங்களுக்கு கிடைக்கும். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொள்பவர்களுக்கு பணம் வசியமாகும் என்பது நம்பிக்கை. வாங்க குங்குமத்தை எதில் போட்டு வைக்க வேண்டும். எப்படி போட்டு வைக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

செல்வத்தை வசியம் செய்ய மகாலட்சுமி பூஜை

வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்வது சிறப்பு. இதற்கு முதலில் வில்வ காய் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த வில்வ காயை இரண்டாக அறுத்து உள்ளே இருக்கும் அந்த பழத்தை வெளியே எடுத்து விடுங்கள். கொட்டாங்குச்சி போல இரண்டு ஓடு கிடைக்கும் அல்லவா. அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமி தாயின் பாதங்களில் வைத்து விட வேண்டும். அது கீழே சாயும்.

அதனால் அது கீழே சாயாதபடி நிற்கவைக்க வேண்டும். ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி கொட்டி இரண்டு பாதி வில்வ ஓட்டில், ஒரு பாதியை மட்டும் நிற்க வைத்தால் போதும். விளக்கு ஏற்றி விடுங்கள். பூஜை செய்ய பூஜை அறையை அலங்காரம் செய்து கொள்ளுங்கள். கொஞ்சமாக தாழம்பூ குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த வில்வ ஓடு இருக்கிறது அல்லவா, அதற்குள்ளே குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமியின் பாதங்களுக்கு முன்பு அந்த ஓட்டை வைத்துவிட்டு, மகாலட்சுமியின் உங்களுக்கு தெரிந்த சுலபமான மந்திரத்தை சொல்லி, இந்த குங்குமத்தை எடுத்து அந்த வில்வ ஓட்டில் போட்டு விட வேண்டும்.

108 முறை மந்திரத்தை உச்சரித்து இந்த குங்கும அர்ச்சனையை செய்யுங்கள். அந்த குங்குமம் அந்த வில்வ ஓட்டிலேயே மகாலட்சுமியின் பாதங்களிலேயே தான் இருக்க வேண்டும். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு அந்த குங்குமத்தை எடுத்து பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி, நெற்றியில் இட்டுக் கொண்டால் அவர்களுக்கு மகாலட்சுமி அம்சம் முழுமையாக கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் குன்றின்மணி தீபம்.

நல்ல பண வசியம் ஏற்படும். செல்வம் அவர்களிடத்தில் குவியும். அவர்கள் கைராசியானவர்களாக முக ராசியானவர்களாக மாறுவார்கள். இது எளிமையாக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றத்துக்குரிய காலம் வரும் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -