வீட்டில் பண வரவு அதிகரிக்க தீபம்

mahalakshmi dheepam
- Advertisement -

வெள்ளிக்கிழமை என்றாலே அது மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டிற்கு உகந்த தினம். அதிலும் தை மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்றைய தினத்தில் நம்முடைய பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் தாயாரின் அனுகிரகத்தை பரிபூரணமாக பெறவும் வழிபாடுகளை செய்வது அவசியம்.

அப்படி நாம் செய்யும் வழிபாடுகளோடு அன்னைக்கு ஏற்றும் தீபத்தில் இந்த ஒரு பொருளை சேர்ப்பதன் மூலம் பணவரவு அன்னையின் அருள் ஆசி அனைத்தும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் எப்படி தீபம் ஏற்ற வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க தீபம்

ஒரு வீட்டில் செல்வ வளம் அதிகரித்து நிம்மதியும் சந்தோஷமும் நிலைத்திருக்க வேண்டும் எனில் அங்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் நிச்சயமாக தேவை. அந்த அனுகிரகத்தை பெறுவதற்கு தாயாரின் மனம் குளிரும் படி நடக்க வேண்டும் அதில் ஒன்று தான் வெள்ளிக்கிழமையில் செய்யும் தாயாரின் வழிபாடு.

இந்த வழிபாட்டின் போது அனைவரும் அன்னைக்கு நெய் தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டிருப்போம். அந்த நெய் தீபத்தில் நாம் ஒரு சில பொருட்களை சேர்த்து ஏற்றும் போது தாயார் மனம் மகிழ்வதுடன் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

இந்த தீபத்தில் சேர்க்க சிறிதளவு ஏலக்காய், பச்சைக் கற்பூரம், கிராம்பு மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள. இது அதிக அதிகமாக அரைபடாது முடிந்த அளவுக்கு பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை நீங்கள் காமாட்சியம்மன் தீபத்தில் போட்டு ஏற்றினாலும் சரி அல்லது மகாலட்சுமி தாயாருக்கு என தனியாக ஏற்று நெய் தீபத்தில் போட்டாலும் சரி நல்லது தான்

இந்த பொடியை போட்டு ஏற்றும் தெய்வத்தின் முன்பு தாயாருக்கு நிச்சயமாக நெய்வேத்தியம் வைக்க வேண்டும். எந்த தீபம் ஏற்றினாலும் என்ன வழிபாடு செய்தாலும் நம்மால் இயன்ற ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை நிச்சயமாக வைக்க வேண்டும். இந்த பொடி போட்டு ஏற்றும் தீபமானது நம் வீட்டில் செல்வ வளத்தை பல மடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

இதை தினமும் கூட போட்டு ஏற்றலாம். ஆனால் நாளைய தை வெள்ளிக்கிழமை. மகாலட்சுமி தாயாருக்கு உகந்த தினத்தில் இந்த வழிபாடை துவங்குவது மிகவும் சிறந்தது. உங்களால் முடிந்தால் நாளை முதல் தினமும் இந்த தீபத்தை ஏற்றலாம். அப்படி ஏற்ற முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை அன்றாவது தவறாமல் ஏற்றுங்கள். இதன் மூலம் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நன்மைகள் பல தரும் குங்கும அர்ச்சனை

பணவரவை அதிகரிக்கவும் தாயாரின் அனுகிரகத்தை பெறவும் ஏற்றக் கூடிய இந்த தீப வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின், நம்பிக்கையுடன் இந்த தீபத்தை ஏற்றுங்கள் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -