கோடி கோடியாக சம்பாதித்து கோடீஸ்வர யோகத்தைப் பெற இவரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை ஜெபித்தாலே போதும். நீங்கள் கனவிலும் நினைக்காத கோடீஸ்வர வாழ்க்கையை வாழலாம்.

sivan dhakshanamurthy
- Advertisement -

எந்த ஒரு மனிதருக்கு தான் நாம் அதிகமாக பணம் சம்பாதித்து நல்ல ஒரு செல்வ நிலையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. நல்ல முறையில் உழைத்து வரும் வருமானத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. அதே சமயம் நம்முடைய உழைப்புடன் சேர்த்து நல்ல பணவரவையும் அதிகரித்துக் கொண்டு வசதியானதொரு வாழ்க்கையை வாழும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது யாரும் அதை வேண்டாம் என்றும் சொல்வதில்லை. அப்படியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திர வழிபாட்டு முறையைப் பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்து கொள்ள போகிறோம்.

கோடிகளை குவிக்க கூடிய மந்திரம்
பொதுவாக செல்வம் சேர வேண்டும் பணவரவு அதிகரிக்க வேண்டும் எனில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவரை வழிபடுவது பலரும் அறிந்தது. ஆனால் இவர்களுக்கெல்லாம் இந்த செல்வத்தை அருளும் பாக்கியத்தையும், செல்வத்தை காக்கும் யோகத்தையும் தந்தவர் ஈஸ்வரர் தான். ஆகையால் தான் ஈஸ்வரருக்கு கோடீஸ்வரர் என்ற ஒரு பெயரும் உண்டு. அத்தகைய ஈஸ்வரரை நாம் வணங்கும் பொழுது நம்முடைய வாழ்க்கை நல்ல நிலைக்கு மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

இந்த வழிபாட்டு முறைக்கு நீங்கள் எதையும் வாங்க வேண்டியது கிடையாது. ஈஸ்வரரை மனதார நினைத்து மந்திரத்தை சொல்ல வேண்டும் அவ்வளவு தான். ஆனால் இந்த மந்திர வழிபாட்டை தொடங்கும் நாள் அமாவாசை, பௌர்ணமி வெள்ளிக்கிழமை இந்த மூன்றில் ஏதேனும் ஒரு நாட்களில் தான் தொடங்க வேண்டும். இதை நீங்கள் ஆலயத்திற்கு சென்று தான் சொல்ல வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது இருக்கும் இடத்திலே ஈஸ்வரரை மனதார நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொன்னாலே போதும்.

இந்த மந்திர வழிபாட்டை தொடங்கும் முன்பு உங்கள் பூஜை அறையை எல்லாம் நன்றாக சுத்தம் செய்து சுவாமிகளுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்ல வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி விடுங்கள். அது எந்த தீபமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஈஸ்வரருக்கு மிகவும் உகந்த வில்வ இலை கிடைத்தால் அன்று அதை வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதன் பிறகு நீங்கள் ஏற்றிய விளக்கின் முன்பு அமர்ந்து கொண்டு கண்களை மூடி மனதார ஈஸ்வரரை நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை சொல்லத் தொடங்குங்கள்

- Advertisement -

சிவ சிவ வசி வசி கோடீஸ்வர யோகம் தர வர வர ஸ்வாகா
என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும் மற்ற மந்திரங்களைப் போல இதை 21, 54 என்று எண்ணிக்கையில் எல்லாம் சொல்லக் கூடாது 108 முறை கட்டாயமாக சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை உங்களால் முடிந்தால் தினமும் கூட பாராயணம் செய்யலாம் அல்லது வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை போன்ற விசேஷ நாட்களில் பூஜையின் போதும் சொல்லலாம் இதை சொல்ல சொல்ல உங்களுக்கான பண வரவு அதிகரித்துக் கொண்டே செல்வதை கண்கூடாக பார்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பண வரவு அதிகரிக்கவும், சுப செலவுகள் மட்டுமே ஏற்படவும் சில்லரை காசுகளை இந்த இடத்தில் இப்படி வைத்தாலே போதும்.

இந்த வழிபாட்டுடன் வியாழக்கிழமைகளில் சிவாலயங்களில் உள்ள தட்சணாமூர்த்திக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது பணத்தடைகளை தகர்த்தெரிவதற்கான வாய்ப்புகள் பெருகும். பண வரவிற்கான மந்திர வழிபாடு செய்யும் இதே வேளையில் பண வரவிற்காகவும் உங்களுடைய மற்ற தடைகள் அனைத்தும் விலகுவதற்காக இந்த தட்சிணாமூர்த்தி வழிபாடு மேலும் நல்ல பலனை கொடுக்கும். இந்த முறையில் நீங்கள் வழிபடும் போது கனவிலும் எதிர்பார்க்காத கோடீஸ்வர யோகம் உங்களை நிச்சயம் வந்தடையும் நம்பிக்கையுடன் இந்த மந்திர வழிபாடு தொடருங்கள்.

- Advertisement -