திருமண வயதை கடந்தும் இன்னும் மணம் ஆகாமல் துன்பப்படுகிறார்வர்கள் இந்த ஒரு எளிய தானத்தை செய்தால் உங்கள் மனதிற்கு ஏற்றார் போல் மணவாழ்க்கை விரைவில் அமையும்.

thirukalyanam thirumanam
- Advertisement -

நம்முடைய கலாச்சார கட்டமைப்பு திருமணம் என்ற பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு தான் நகர்கிறது. ஆகையால் தான் திருமணத்திற்கு நம் முன்னோர்கள் காலம் முதல் இன்று வரை அதிக முக்கியத்துவம் கொடுத்தும் வெகு விமர்சையாகவும் செய்கிறார்கள். இதனாலேயே தான் திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் அதை சரியான காலத்தில் செய்ய வேண்டும் என்றும் சொல்லியும் வைத்தார்கள். இது ஒரு புறம் இருந்தாலும் திருமணம் என்பது இரு மனம் இணைந்து அமைவது தான். அப்படியான ஒரு நல்ல இல்லற வாழ்க்கை தான் ஒவ்வொருவரும் விரும்பி நாடுகிறார்கள்.

இன்றைய சூழலில் திருமணம் என்பதே பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இது அவர்களுடைய ஜாதக கோளாறா அல்லது வேறு ஏதேனும் தோஷமா? என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து சரி செய்து கொள்வது ஒரு புறம் இருந்தாலும் கூட ஒரு சில ஆன்மீக பரிகாரங்களை செய்யும் பொழுது திருமண தடைகள் விலகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. அப்படியான ஒரு பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

திருமண தடை நீக்கும் பரிகாரம்
இந்த பரிகாரத்தை ஆண் பெண் என இருபாலரும் செய்யலாம் ஆனால் அவரவர் கைகளாலே செய்வது மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு பொருளை நாம் சமைத்து தானமாக வழங்க வேண்டும். சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தே கொடுக்கலாம் தெரியாதவர்கள் வீட்டில் உள்ளவர்கள் சமைத்த பிறகு இந்த தானத்தையாவது அவர்கள் கைப்பட கொடுக்க வேண்டும் இது மிகவும் முக்கியம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு நாம் வெள்ளிக்கிழமை நாளை தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது மகாலட்சுமி தாயாரை நினைத்து அவருடைய சன்னிதானத்தில் செய்ய வேண்டும். பெருமாள் கோவில் அனைத்திலும் மகாலட்சுமி தாயார் இருப்பார் அங்கு இந்த தானத்தை கொடுக்க வேண்டும். அப்படி நாம் தானமாக கொடுக்க வேண்டிய பொருள் அப்பம். இந்த அப்பத்தை நாம் வீட்டில் சுத்தமாகவும் நல்ல முறையிலும் தயாரித்து ஆலயத்திற்கு கொண்டு சென்று அங்கு மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வைத்து படைத்த பிறகு ஆலயத்திற்கு வருபவர்க்கு எல்லாம் இதை நாம் தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தானத்தை ஆறு வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் ஆகையால் பெண்கள் இருந்த பரிகாரத்தை தொடங்கும் பொழுது அவர்களுக்கான அந்த நாட்களை கணக்கிட்டு பிறகு ஆரம்பிங்கள். ஒரு வேளை இடையில் இருந்து விட்டால் நீங்கள் அதன் பிறகு இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது. அதே போல் இந்த தானத்தை பரணி நட்சத்திரம் வரும் நாள் என்றும் கொடுக்கலாம்.

நீங்கள் ஆறு வாரம் கொடுக்கும் பொழுது இடையில் பரணி நட்சத்திரம் நாள் வந்தால் அந்த நாளிலும் இது போல செய்து கொண்டு கொடுக்கலாம். வெள்ளிக்கிழமை யில் பரணி நட்சத்திரம் வந்தால் இன்னும் வெகு சிறப்பு அந்த நாளை தவிர விடாமல் இந்த பரிகார தானத்தை செய்து விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதோடு ஆலயங்களில் தெய்வங்களுக்கு நடக்கும் திருமண வைபவங்களில் கலந்து கொள்வது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும். குறிப்பாக பெருமாள் கோவில்களில் நடக்கும் இந்த திருமண வைபோகத்தில் தவறாது கலந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

இதையும் படிக்காலமே: சனிபகவானால் படக்கூடாத கஷ்டங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறீர்களா? அப்படி என்றால் காகத்திற்கு இந்த ஒரு பொருளை வையுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து நல்ல வழி கிடைக்கும்.

இத்துடன் உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் கவனத்துடனும், அக்கறையுடனும் தொடர்ந்து இருங்கள். நிச்சயம் உங்கள் மனதிற்கு ஏற்ற நல்ல மன வாழ்க்கை அமையும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -