பண வரவை அதிகரிக்க வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு

vinayagar manthiram
- Advertisement -

இன்று பெரும்பாலானோர் புலம்புவது என்னவெனில் என்னிடம் பணம் இல்லை எவ்வளவு சம்பாதித்தாலும், பணம் கையில் தங்க மாட்டேன் என்கிறது வரவுக்கு மீறிய செலவு தான் ஆகிறது என்று தான். இதை நாம் கேட்காமல் ஒரு நாளைக் கூட கடந்திருக்க மாட்டோம். ஏனெனில் இது போன்ற சூழ்நிலையில் தான் நாமும் இருப்போம். நம்மை சுற்றி உள்ளவர்களும் புலம்புவார்கள்.

பணம் இல்லவே இல்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், சம்பாதித்தாலும் கையில் தங்குவதில்லை என்றால் அதுவும் ஒருபுறம் பண கஷ்டத்தை தான் ஏற்படுத்தும். இப்படி பண பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணப் பிரச்சனையை தீர்க்கும் வழிபாடு

இந்த வழிபாட்டை நீங்கள் வெள்ளிக்கிழமை வேளையில் சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். பணம் என்றாலே மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் தான். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். இருவருக்கான வழிபாட்டு நாளும் வெள்ளிக்கிழமை தான். அதிலும் சுக்கிரஹோரை என்பது நம்முடைய பணவரவை அள்ளி வழங்கக் கூடிய அற்புதமான ஒரு நேரம்.

இந்த நேரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வழிப்பாடும் நமக்கு பல மடங்கு பலனை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. வெள்ளிக்கிழமையில் வீட்டில் மகாலட்சுமி தாயாரை நினைத்து பூஜை செய்ய வேண்டும். இதை ஒரு வழக்கமாகவே கொள்ளுங்கள். இத்துடன் இதே நேரத்தில் நாம் விநாயகரை வழிபடும் பொழுதும் நம்முடைய செல்வ வளம் அதிகரிக்கும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு தகவலாக இருக்கும். இப்பொழுது அதை தான் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரை நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடிக்கு சென்று 108 முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் போது ஓம் லட்சுமி கணபதையே நமஹ என்ற இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். அப்படி 108 முறை வலம் வர முடியாது என்பவர்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சுக்கிர ஹோரையில் செல்லுங்கள்.

16 நெய் தீபங்கள் விநாயகருக்கு ஏற்றி வைத்து விட்டு விநாயகருக்கு முன் அமர்ந்து ஓம் லட்சுமி கணபதையே நமஹ என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு விநாயகரை வலம் வந்து வழிபாட்டை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது பண தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க வெள்ளி மோதிர பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை தரக் கூடிய சுக்கிரன் அந்த வரத்தை அருளக் கூடிய தாயார் இவை நம்மை வந்து சேர்வதற்கான தடைகளை தகர்க்கக் கூடியவர் விநாயகர். இந்த மூவரையும் ஒருசேர வணங்கும் போது நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விதமான பண பிரச்சனைகளும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -