செல்வம் பெருக தை மாதம் கடைசி நாள் வழிபாடு

selvam peruga dheepam
- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரு பொன்மொழிதான். தை மாதத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடு பூஜைகளும் நமக்கு பல மடங்கு நன்மைகளை தருவதாக அமையும். அத்துடன் அந்த மாதத்தில் நாம் வழிபடும் ஒவ்வொரு வழிபாடும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வதற்காகவே நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள்.

ஆகையால் தான் இந்த மாதத்தில் வரக்கூடிய அத்தனை நாட்களிலும் விசேஷம் நிறைந்திருக்கிறது. ஆகையால் தான் அனைத்து நாட்களிலும் நாம் விசேஷமான பூஜைகளையும் வழிபாடுகளையும் செய்கிறோம். அப்படியான அற்புதமான இந்த தை மாதம் கடைசி நாளான நாளை ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம் நம்முடைய வாழ்வில் செல்வ வளத்தை பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக தை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

இந்த தீபத்தை நாளைய தினம் திங்கட்கிழமை தை மாதத்தில் கடைசி நாள் மாலை வேலையில் தான் ஏற்ற வேண்டும். அதே போல இந்த தீபத்தை பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். இந்த தீப வழிபாடு செய்வதற்கு மாலையில் பூஜையறையில் முதலில் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பிறகு இந்த வழிபாட்டிற்கு என தனியாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த அகல் விளக்கின் முன்பாக வாழை இலையை விரித்து வைத்து அதில் முதலில் மஞ்சளால் விநாயகரை பிடித்து வைத்து விடுங்கள். விநாயகருக்கு அருகம்புல்லை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது அந்த வாழை இலையில் அவல் பொரிகடலை பிரசாதமாக வைக்க வேண்டும். அதே போல் நம் வீட்டில் சர்க்கரை பொங்கல் செய்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்பொழுது ஒரு கிண்ணத்தில் உதறிப் பூக்களை வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு வாசனை மிக்க மலர்களாக இருந்தால் மிகவும் நல்லது.

நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் இந்த அகல் விளக்கை உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வமாகவோ அல்லது உங்கள் குலதெய்வமாகவோ பாவித்து கொள்ளுங்கள். எந்த தெய்வத்தை நீங்கள் மனதில் நிறைத்தீர்களோ அந்த தெய்வத்தின் நாமத்தை சொல்லி நாம அர்ச்சனை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் விநாயகரையே மனதில் நினைத்தால் ஓம் கணபதியே நமஹ என்று 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

வேறு தெய்வங்களை மனதில் நினைத்தாலோ உங்கள் குலதெய்வத்தை நினைத்தாலோ அந்த தெய்வத்தின் பெயரை சொல்லி நமஹ என்ற நாமத்தையும் சேர்த்து 108 முறை உதிரிப்பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனை செய்யும் போது உங்கள் மனதில் இந்த தை மாதம் சகல செல்வத்தையும் கொடுத்ததற்கு நன்றி என்றும் வரும் கைக்குள் எங்களுடைய செல்வ நிலை பல மடங்கு உயர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த தை மாதத்தில் நல்ல சூழ்நிலை அமையவில்லை என்றாலும் வரும் தைக்குள்ளாகவாது எங்களுடைய நிலை மாற வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த பிரார்த்தனை நிச்சயம் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றும் என்று சொல்லப்படுகிறது.

பூஜை முடிந்த பிறகு தீபாராதனை காட்டியவுடன் நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்கள் பகிர்ந்து உண்ணுங்கள். இந்த அவல் பொரிகடலையை சிறிதளவு எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு தனியாக வைத்து விடுங்கள். மறுநாள் காலை இதை பறவைகளுக்கு தானமாக கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் சொத்து தொடர்பான பிரச்சனை தீர முருகர் வழிபாடு

இந்த முறையில் வழிபாடு செய்து படைத்த இந்த உணவு பறவைகளுக்கு தானமாக கொடுக்கும் போது உங்கள் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி சகல சௌபாக்கியத்தையும் பெற்று வாழக் கூடிய யோகத்தை பெறுவீர்கள் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாடு செய்தி பலன் பெறலாம்.

- Advertisement -