செல்வம் பெருக குபேர மந்திரம்

kuberar sivan
- Advertisement -

செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமி தாயாரையும் பெருமாளையும் சொன்னாலும் அந்த செல்வத்தையே பாதுகாக்க கூடிய கடவுளாக குபேரரை தான் சொல்லுவோம். செல்வத்தை தரக்கூடிய பெருமாளுக்கே கடன் கொடுத்தவர் குபேரர். அத்தகைய குபேரரை எப்படி வணங்கினால் நம்முடைய வாழ்க்கையில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் செல்வ வளத்துடன் வாழலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வம் பெருக குபேர மந்திரம்

செல்வத்துக்கு பாதுகாவலரான குபேரருக்கு உகந்த நாள் எனில் அது வியாழக்கிழமை. வியாழக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து 6.00 மணியிலான காலம் குபேர காலம் என்று சொல்லப்படுகிறது. அதே போல் கார்த்திகை மாதம் ஆனது அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த மாதமாக சொல்லப்பட்டாலும், குறிப்பாக சிவபெருமானுக்குரிய மாதமாக இது போற்றப்படுகிறது. சிவபெருமானை வழிபடக்கூடிய கார்த்திகை மாதத்தில், அவரின் அருளால் செல்வத்தை பாதுகாக்கும் வரத்தை பெற்ற குபேரர்.

- Advertisement -

அவரை நினைத்து இந்த மந்திரத்தை சொல்லும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் சகல சம்பத்துகளையும் பெறலாம். இந்த வழிபாட்டை உங்கள் வீட்டு பூஜை அறை, வரவேற்பறை இரண்டில் எந்த இடம் வசதியாக உள்ளதோ அங்கு அமர்ந்து செய்யலாம். இந்த வழிபாடு செய்வதற்கு முன்பு ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் கிழக்கு முகமாக எறியும்படி வைத்து விடுங்கள். நீங்கள் தீபத்தின் அருகில் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் வடக்கு உரிய தெய்வம் ஆக கருதப்படுபவர் இந்த குபேரர். இப்படி அமரும் போது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து என்று எண்ணிக்கையும் குபேரருக்குரியதாக பார்க்கப்படுகிறது. இந்த நாணயத்தை வைத்து கைகளை இருக்க மூடி குபேரரை நினைத்து கீழ்வரும் மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் குபேராய நமக

என்ற இந்த எளிய மந்திரத்தை 54 முறை கண்களை மூடி அமர்ந்த நிலையில் சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த நாணயத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த நாணயம் அங்கு அப்படியே இருக்க வேண்டும். குபேரரை நினைத்து மந்திரத்தை ஜெபித்து வழிபட்ட இந்த நாணயம் இருக்கும் இடத்தில் பண வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் கிடைக்க பைரவர் வழிபாடு

சிறப்பு வாய்ந்த இந்த கார்த்திகை மாதத்தில் குபேர வியாழக்கிழமையன்று இந்த மந்திர வழிபாட்டை செய்பவர்கள் வாழ்க்கையில் பணவரவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருகும். இதன் மூலம் அவர்கள் குபேர சம்பத்துடன் வாழலாம். இந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு நீங்களும் நம்பிக்கையுடன் செய்து பலனடையுங்கள்.

- Advertisement -