குழந்தை பாக்கியம் கிடைக்க பைரவர் வழிபாடு

bairavar
- Advertisement -

பத்து, பதினைந்து என்று குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை பெற்றெடுத்த காலம் போய் இப்பொழுது பத்து வருடமானாலும் ஒரு குழந்தை கூட இல்லையே என்று வருத்தப்படக் கூடிய காலமாக மாறிவிட்டது. இந்த காலத்தில் பல மருத்துவ வளர்ச்சிகள் ஏற்பட்டும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் கஷ்டப்படும் தம்பதிகள் பலர் இருக்கிறார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குழந்தை பாக்கியம் பெற பைரவரை வழிபடும் முறையைப் பற்றி பார்ப்போம்.

பைரவர் வழிபாடு என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. பைரவரை எந்த நோக்கத்திற்காக வேண்டுமானாலும் நாம் வழிபடலாம். அதிலும் பைரவரை கடன் பிரச்சினை தீரவும், விபத்துகளை தடுக்கவும், வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கவும், தொழில் லாபகரமாக நடப்பதற்கும், சனிபகவானால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளி வருவதற்கும் வழிப்படுவார்கள். இதே போல் தான் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் குழந்தை பேரு வேண்டி பைரவரை வழிபடலாம்.

- Advertisement -

இரண்டு முறைகளில் குழந்தை பாக்கியத்திற்காக பைரவரை வழிபட முடியும். முதல் முறை தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த நாள் அன்று முழுவதும் தங்களுடைய வசதிக்கேற்ப ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வீற்றிருக்கும் கால பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி வைத்து, அங்கு இருக்கும் அர்ச்சகர் இடம் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய சொல்ல வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இவ்வாறு தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமிகள் செய்ய வேண்டும்.

இரண்டாவது முறை வியாழக்கிழமை அன்று காலை 7:30 மணிக்குள் அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பைரவருக்கு சந்தன காப்பு செய்ய வேண்டும். பிறகு அவருக்கு கொட்டையுடன் இருக்கக்கூடிய முந்திரி பருப்பில் மாலை கட்டி சாற்ற வேண்டும். வெறும் முந்திரி பருப்பை வைத்து மாலை கட்டக்கூடாது.

- Advertisement -

கொட்டையுடன் இருக்கக்கூடிய முந்திரி பருப்பை தான் பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் முழுமையான பலன் கிடைக்கும். முந்திரிக்கொட்டை என்பது கர்ப்பப்பையாகவும் அதற்குள் இருக்கும் முந்திரி பருப்பு குழந்தையாகவும் இருக்கும் அமைப்பில் இருப்பதால் இந்த மாலையை கட்டி வைரவருக்கு அணிவிக்கும் பொழுது விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பிறகு அவருக்கு புனுகு பூசி, முந்திரி பருப்பு, கொண்டை கடலை சுண்டல் போன்றவன் நெய்வேத்தியமாக படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். பிறகு அன்றைய தினம் ஐந்து நபர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர பைரவரின் அருளால் விரைவிலேயே குழந்தை பாக்கியம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: தொழில் சிறக்க சக்கரத்தாழ்வார் வழிபாடு.

இந்த இரண்டு முறையில் ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டையுமே செய்து அதே சமயம் மருத்துவரின் தக்க ஆலோசனையும் பெறுவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பாக்கியத்தை
வைரவர் கண்டிப்பான முறையில் அருள்வார்.

- Advertisement -