வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு

mahalakshmi javithiri
- Advertisement -

வீட்டில் பண வரவு அதிகரிக்க, லட்சுமி கடாட்சம் பெருக, நிம்மதியாக வாழ இப்படி எதை எடுத்தாலும் அதற்கு தாயாரின் அனுகிரகம் கட்டாயமாக தேவை. ஆகையால் தான் நம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு வழிபாட்டிலும் தாயாரை முன் நிறுத்தி செய்வோம். அப்படி தாயாரை வணங்கும் போது அவருக்கு பிடித்த நெய்வேத்தியங்கள், மலர்கள் பொருள் என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வைத்து வழிபாடு செய்வோம்.

அந்த வகையில் இந்த வழிபாடும் நம்முடைய செல்வ வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக தான். இதில் தாயாருக்கு மிகவும் உகந்த ஒரு பொருளை வைத்து வழிபட்டு நம்முடைய செல்வ வளத்தை எப்படி பெருக்கிக் கொள்வது என்று தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

செல்வ வளம் பெருக மகாலட்சுமி தாயார் வழிபாடு

இந்த வழிபாடு செய்ய தாயாருக்கு நாம் ஒரு பொருளை மாலை அணிவிக்க வேண்டும். அது என்னவென்று இப்பொழுது நாம் தெளிவாக பார்க்கலாம். நம் அனைவருக்கும் ஜாதிக்காய் பற்றி தெரியும். இந்த ஜாதிக்காய் குபேர சம்பத்து உடையது பண ஈர்ப்பு தன்மையை அதிகரிக்கும் என்பது தெரியும்

ஆனால் இந்த ஜாதிக்காயின் மேல் உள்ள தோலை ஜாவித்திரி என்று சொல்வார்கள். இதற்கும். தன ஆகர்ஷண சக்தி உண்டு என்பது பலருக்கும் அறியாத தகவலாக இருக்கும். பெரும்பாலும் இந்த ஜாவித்திரியை நம் மசாலா பொருட்களுடன் சேர்த்து அரைக்க பயன்படுத்துவோம். இப்போது அந்த பொருளை வைத்து தான் நம் வீட்டில் தன ஆகர்ஷணத்தை எப்படி அதிகரிப்பது என்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நீங்கள் இந்த ஜாவித்திரியில் மகாலட்சுமி தாயாருக்கு மாலை கட்ட வேண்டும். இதை எண்ணிக்கையில் ஒற்றைப்படையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்து இந்த மாலை சூட்டி அணிவிக்கும் நாள் அன்று தாயாருக்கு சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் வைக்க வேண்டும்.

அந்த சர்க்கரை பொங்கலிலும் சிறிதளவு இந்த ஜாவித்திரியை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு வெள்ளிக்கிழமை நாளில் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். எனெனில் தாயாருக்கு உகந்த நாளெனில் அது வெள்ளிக்கிழமை தான். வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்தில் தாயாருக்கு ஜாவித்திரியில் மாலை அணிவித்து, ஜாவித்திரி சேர்த்த சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி தாயாரை மனதார வழிபாடு செய்த பிறகு நெய்வேத்தியத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள். அதே போல் தொடர்ந்து மூன்று அல்லது ஐந்து வெள்ளிக்கிழமை தாயாரை வணங்க வேண்டும். இந்த ஜாவித்திரியில் ஒரு முறை மாலை தொடுத்து போட்டால் போதும். அது வாடாமல் அப்படியே இருக்கும். நெய்வேத்தியத்தை மட்டும் வாரம் வாரம் செய்து வைத்து வழிபாடு செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பை பெருக்கும் குபேரர் வழிபாடு

இதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரித்து செல்வநிலை பல மடங்கு உயரக்கூடிய வாய்ப்பை தாயார் நமக்கு அருள்வார் என்று சொல்லப்படுகிறது. எளிமையான முறையில் தாயாரை இப்படி வழிபாடு செய்து நம்முடைய செல்வ நலனை பெருக்கிக் கொள்ள நாமும் முயற்சி செய்வோம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாடு செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -