ஏழ்மை நீங்க லட்சுமி அஷ்டோத்திர நாமாவளி வழிபாடு

varumai neenga
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையிலும் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் துன்பப்படும் எத்தனையோ பேரை நாம் சந்திக்க தான் செய்கிறோம். இவர்கள் எத்தனை முயற்சி செய்தும் அவர்களுடைய ஏழ்மை நிலை மாறவே மாறாது. அவர்கள் இரவும் பகலும் அயராது பாடுபட்டாலும் கூட, சம்பாதிக்கும் பணம் கையில் தாங்காது அல்லது கடன் கட்ட தான் சரியாக இருக்கும்.

இது இல்லாத போனால் வீட்டில் ஏதாவது பிரச்சனைகள், ஆரோக்கியக் கேடு என்று வந்து கொண்டே இருக்கும். ஆக மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லாத தொடர்ந்து வறுமை நிலையிலே உழன்று கொண்டு இருப்பார்கள். இந்த நிலை மாறி அவர்களும் செல்வ செழிப்பான வாழ்க்கை வாழ இந்த ஒரு மந்திர வழிபாட்டை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஏழ்மை நிலை அகல மகாலட்சுமி அஷ்டோத்திர வழிபாடு

செல்வ செழிப்புடன் ஒருவர் வாழ வேண்டும் எனில் நிச்சயம் அவருக்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் தேவை. அந்த அனுகிரகத்தையும் அவ்வளவு எளிதில் எல்லாராலும் பெற்று விட முடியாது. நாம் செய்யும் வழிபாடுகளிலும் நாம் நடந்து கொள்ளும் முறைகளிலும் தாயானவர் மனம் மகிழ்ந்து இருந்தால் தான் இத்தகைய அருளை நம்மால் பெற முடியாது.
தாயாரின் அருளை பெற இந்த ஒரு மந்திர வழிபாட்டை செய்யலாம். மகாலட்சுமி தாயாருக்கு உகந்த நாளான வெள்ளிக்கிழமையில் இந்த மந்திர வழிபாட்டை தொடங்கலாம். இதை காலை அல்லது மாலை என எந்த நேரத்திலும் தொடங்கலாம் .இந்த வழிபாடு தொடங்குவதற்கு முன்பாக மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர்ச்சூடி நெய் ஊற்றி தீபம் ஏற்றி விடுங்கள்.

அதன் பிறகு தாயாரின் முன் அமர்ந்து மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க வேண்டும். இதில் தாயாரின் 108 போற்றிகள் இருக்கும். இதை படிக்கத் தெரியாதவர்கள் இதை பாடலாக ஒலிக்க விட்டும் கேட்கலாம். மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை ஒரு நாளைக்கு 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

இதை எங்களால் இத்தனை முறை முடியாது என்பவர்கள் 48 நாட்கள் தொடர்ந்து காலை அல்லது மாலை அல்லது இரண்டு வேளையும் இந்த மந்திர வழிபாட்டை செய்யுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்ய செய்ய உங்களுடைய வறுமை நிலை முற்றிலுமாக மாறி செல்வ நிலை உயர தொடங்குவதை கண்கூட காணலாம் என்று நம்பிக்கையுடன் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: செலவு செய்த பணம் இரட்டிப்பாக திரும்ப வர

நம் வீட்டில் இருக்கும் ஏழ்மை நிலை அகன்று செல்வ நிலையை அடைய மகாலட்சுமி தாயாரின் இந்த எளிய வழிபாட்டு முறை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த வழிபாட்டு முறையை நம்பிக்கை உடன் செய்து மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளை பெற்று நல்ல முறையில் வழி தேடி கொள்ளுங்கள்.

- Advertisement -