வீட்டில் என்றென்றைக்கும் ஐஸ்வர்யங்கள் நிறைந்திருக்க இந்த தண்ணீரை வீடு முழுதும் தெளித்து விடுங்கள்.

selvam peruga
- Advertisement -

வீட்டில் ஐஸ்வர்யங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றாலே அங்கு மகாலட்சுமி தாயாரின் வாசம் வேண்டும். தாயார் நம் இல்லங்களில் மகிழ்ச்சியுடன் வாசம் செய்ய தாயாரை தினமும் நினைத்து பூஜை செய்வது வீட்டை நல்ல முறையில் பராமரிப்பது போன்றவற்றையெல்லாம் தவறாமல் நாம் கடைபிடிக்க வேண்டும்.

ஏனெனில் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்தால் சகல சம்பத்துக்களும் நமக்கு கிடைக்கும். அத்துடன் குபேரர், சுக்கிர பகவானின் அருள் இவையெல்லாம் ஒருவருக்கு கிடைக்கப் பெற்றால் அந்த வாழ்க்கை நிறைவான நிம்மதியான வாழ்க்கையாக அமையும்.

- Advertisement -

இப்படி அனைத்தையும் தரக்கூடிய மகாலட்சுமி தாயாரை வணங்கி இந்த ஒரு எளிய வழிபாட்டை நம் இல்லத்தில் செய்தால் என்றென்றைக்கும் ஐஸ்வர்யம் நிலைத்து நிற்கும் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி தாயாரை வணங்கும் முறை

இந்தப் வழிபாட்டு முறையை வெள்ளிக்கிழமை அன்று தொடங்குங்கள். வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த வழிபாட்டை தொடங்கலாம் அல்லது ஆறிலிருந்து ஏழு மணி வரையிலான சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை தொடங்கலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது கஜலட்சுமி தாயார் படம் இரண்டில் ஏதேனும் ஒன்று வேண்டும். அதை பூஜை அறையில் வைத்து துடைத்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து வாசனை மிக்க மல்லிகை மலரால் உங்கள் கைகளாலே மாலை தொடுத்து போடுங்கள். அடுத்து நல்ல மனம் மிக்க ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை போட்டு விடுங்கள்.

வீட்டில் எந்த அளவிற்கு நல்ல நறுமணங்கள் மனம் கமழ்கின்றதோ அங்கு தாயாரின் வாசம் நிச்சயம் இருக்கும் என்பது ஐதீகம். இத்துடன் உங்களால் முடிந்த எளிமையான ஒரு நெய்வேத்தியத்தை வைத்து விடுங்கள். எதுவும் செய்ய முடியாதபட்சத்தில் ஒரு டம்ளர் பசும்பாலில் ஏலக்காய் சர்க்கரை கலந்தும் வைக்கலாம்.

- Advertisement -

அடுத்து பஞ்ச பாத்திரம் அல்லது சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீரை நிரப்பி கொஞ்சம் பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிதளவு மஞ்சள் தூள் மூன்றையும் சேர்த்த பிறகு அதில் மாவிலை அல்லது வெற்றிலை ஏதாவது ஒன்றை போட்டு உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது தாயாரின் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஏற்றிய பிறகு இந்த தண்ணீர் சொம்புடன் அமர்ந்து மகாலட்சுமி அஷ்டகத்தை படிக்க வேண்டும். இதை படித்து முடித்த பிறகு இந்த தண்ணீரை முதலில் உங்கள் மீது தெளித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை வீடு முழுவதும் பணம் வைக்கும் இடம் பீரோ போன்றவற்றில் தெளித்து விடுங்கள்.

இந்த பூஜை முறையை தொடர்ந்து 90 நாட்கள் செய்து வரும் பொழுது உங்கள் வீட்டின் இருக்கும் செல்வ நிலை பன்மடங்கு உயர ஆரம்பிக்கும். இந்த மகாலட்சுமி அஷ்டோத்திரத்தை பூஜை செய்யும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். அதை படிக்க படிக்க வீட்டில் அத்துனை செல்வங்களும் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள்

மகாலட்சுமி தாயாரை இப்படி எளிமையான முறையில் வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை செல்வ நிலையை அதிகரித்து என்றென்றைக்கும் மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -