குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்

puthan studying girl
- Advertisement -

ஒவ்வொரு பெற்றோரும் காலை முதல் மாலை வரை ஓடுவதும் பணம் சம்பாதிப்பதும் செல்வத்தை சேர்ப்பதும் தங்களுக்காக இல்லை. தங்களுடைய பிள்ளைகள் நல்ல கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காகத் தான். இதில் அவர்கள் சேர்க்கும் செல்வம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அதை செயல் படுத்த முதலாவதாக தேவை குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவும், ஞானமும், படிக்கும் திறனும் தான்.

அந்த திறமையும் ஆற்றலும் அவர்களுக்குள் இருந்தால் மட்டுமே நாம் செலவு செய்யும் அனைத்தும் உபயோகமானதாக இருக்கும். இந்தத் திறமைகளையும், அறிவு ஞானத்தையும் அவர்களுக்கு பெருக் கெடுக்க செய்ய புதன் கிரகத்தின் பரிபூரணமான அருள் இருக்க வேண்டும். அந்த அருளை முழுமையாக தங்களுடைய குழந்தைகளுக்கு தர விருப்பப்படும் பெற்றோர்கள் இந்த தானத்தை செய்யலாம் நாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன தானம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க தானம்

இந்த தானத்தை புதன்கிழமை அன்று செய்வது தான் சிறந்தது. புதன்கிழமை காலை 7 மணிக்குள் கொடுக்க முடிந்தால் கொடுத்து விடுங்கள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு இந்த நேரத்தில் கொடுங்கள். அதே போல் இந்த தானத்தை கொடுத்தால் பிறர் வாங்குவார்களா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். உங்களுடைய குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக நீங்கள் தான் இந்த முயற்சியும் எடுக்க வேண்டும்.

இதற்கு மூன்று பொருள்களை நாம் தானமாக கொடுக்க வேண்டும். ஒன்று பாஸ்மதி அரிசி, இரண்டாவது பச்சைபயிர், மூன்றாவது வெல்லம். இதன் அளவுகளை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்த மூன்று பொருள்களையும் ஒன்றாக சேர்த்து மேலே சொன்ன நேரங்களில் தானமாக கொடுக்க வேண்டும். இந்த தானத்தை குறைந்தது 5 வாரங்கள் செய்ய வேண்டும். மேற்படி 9 வாரங்கள் அல்லது பதினோரு வாரங்கள் என உங்களால் எத்தனை வாரங்கள் செய்ய முடிந்தாலும் பலன் அதிகம் உண்டு.

- Advertisement -

இந்த தானத்தில் கொடுக்கப்படும் பாசுமதி அரிசி சந்திரனுடைய அனுக்கிரகம் பெற்றது. சந்திரன் என்றாலே அறிவு கூர்மை தான். அதே போல் பச்சை பயிரானது புதன் கிரகத்தின் அனுகிரகம் பெற்றது. புதன் ஞானத்தை கொடுக்கக் கூடியவர். வெல்லமானது. குருபகவானை பற்றி கேட்கவே தேவையில்லை. கல்விக்கெல்லாம் முதன்மையானவர். ஒருவர் சமூகத்தில் நல்ல மதிப்புடனும் அந்தஸ்துடனும் வாழ தேவையானவற்றை அருளும் மூன்று முக்கியமானவர்களும் இவர்களே.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் நம்முடனே இருக்க வழிபாடு

இந்த மூன்று முக்கியமான கிரகங்களுக்குரிய பொருளை தானமாக சேர்த்துக் கொடுக்கும் பொழுது உங்களுடைய பிள்ளைகள் நிச்சயம் சிறந்து விளங்குவார்கள் என்பதில் துணியும் சந்தேகம் வேண்டாம். இந்த தானா முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை செய்து உங்களுடைய குழந்தைகளின் ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருங்கள்.

- Advertisement -