எப்பேர்ப்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்கு ஒரு தேங்காய் இருந்தாலே போதும்.

coconut
- Advertisement -

பூலோகத்தின் கற்பகவிருட்சம் என்று தென்னை மரத்தை குறிப்பிடுகிறது வேதங்கள். அப்படிப்பட்ட தென்னை மரத்தில் இருந்து பெறக்கூடியது தான் தேங்காய் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆதலால் தான் பூஜை என்று சொன்னாலே அதில் தேங்காய் என்பது அத்தியாவசியமாக இடம்பெறக்கூடிய முக்கியமான பொருளாக விளங்குகிறது. தேங்காய் இல்லாமல் எந்தவித பூஜையோ, யாகமோ, வழிபாடோ நடைபெறாது. எந்த ஒரு தெய்வத்தையும் கலசமாக ஆவாகனம் செய்யும் பொழுது அந்த தெய்வத்தின் தலைப்பகுதியாக நாம் தேங்காயை தான் வைத்து வழிபடுகிறோம். அப்படிப்பட்ட தேங்காயை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒரு காரியத்தை நாம் செய்வதற்கு முன்பாக விநாயகருக்கு சிதறு காய் உடைத்தால் செல்லும் காரியம் வெற்றி அடையும் என்ற கூற்று நிலவி வருகிறது. மேலும் தேங்காய் என்பது முக்கண் உடையது என்பதால் அது சிவபெருமானுக்கு இணையாக கருதப்படுகிறது. மேலும் அதில் சக்தியின் அம்சமான மஞ்சளை பூசுவதன் மூலம் அந்த தேங்காய் அர்த்தநாரீஸ்வரராக திகழ்கிறது.

- Advertisement -

இந்த தேங்காயை வைத்து பல வழிபாடுகளும், பரிகாரங்களும் இன்றுவரை மேற்கொண்டு தான் வருகிறோம். நல்ல விஷயத்திற்காக இருந்தாலும் சரி தீய விஷயத்திற்காக இருந்தாலும் சரி அனைத்திலும் இந்த தேங்காய் என்பது நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மேலும் தேங்காயை தெய்வத்திற்கு உடைக்கும் பொழுது அதில் பூ வந்திருந்தால் நல்ல சகுனம் என்றும், அழுகிப்போய் இருந்தால் கெட்ட சகுனம் என்றும் சகுனத்திற்காகவும் நாம் தேங்காயை உபயோகப்படுத்துகிறோம்.

பல அற்புதமான சக்திகளையும் ஆன்மீக குறிப்புகளையும் கொண்ட தேங்காயை வைத்து ஒரு எளிமையான பரிகாரத்தை நாம் செய்யும் பொழுது அந்த பரிகாரம் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும். அந்த பரிகாரம் என்ன என்று பார்ப்போம். புதன்கிழமை அன்று மாலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரு தேங்காயை வாங்கி வர வேண்டும் வாங்கி வந்த அந்த தேங்காயை வீட்டின் வடகிழக்கு மூலையான ஈசானிய மூலையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் 3 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அந்த தேங்காயை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த விநாயகரிடம் நம்முடைய வேண்டுதல் என்ன என்பதை முன் வைத்துவிட்டு சிதறு காயாக தேங்காயை உடைக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 14 வாரங்கள் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். மேலும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்டிருக்கும் சுப காரியங்கள் அனைத்தும் நடைபெறும். குழந்தைகள் படிப்பு, குழந்தை பாக்கியம், திருமண தடை, வியாபார தடை, குடும்ப ஒற்றுமை என்று அனைத்தும் மேலோங்கும்.

இதையும் படிக்கலாம்: வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு ஏழு ரோஜா மலரை வைத்து இப்படி பூஜை செய்தால் போதும். பண தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து பணம் பல வழிகளில் உங்களை வந்தடைந்தே தீரும்.

எளிமையான இந்த தேங்காய் பரிகாரத்தை நம்பிக்கையுடன் நாமும் செய்து நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்வோம்.

- Advertisement -