மகாலட்சுமி தாயாரின் அருள் பெறும் வழிமுறைகள்

selvam peruga
- Advertisement -

ஒருவர் அவருடைய வாழ்க்கையில் கஷ்டப்படுவது பணத்தை சம்பாதிப்பதற்காக மட்டும்தான். பணத்தை ஒருவர் சம்பாதித்தாலும் அது தன்னிடம் நிலையாக இருந்து விட்டால் அதனால் அவருக்கு மகிழ்ச்சியே ஏற்படும். அப்படிப்பட்ட மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு நாம் என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக செல்வ செழிப்பை ஏற்படுத்துவதற்கு என்று பல வழிபாட்டு முறைகளும், பரிகாரங்களும் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மகாலட்சுமி தாயாரின் மனதை குளிர்விக்கும் வகையில் பல வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் சில வழிமுறைகளை தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு அபிஷேகத்திற்காக பசும்பால் வாங்கி தருவதன் மூலம் வீட்டில் செல்வ செழிப்பு என்பது அதிகரிக்கும். அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கு பச்சை நிற வளையலை அணிவித்தாலும் அவளின் மனம் மகிழ்ந்து நமக்கு பரிபூரண அருளை வழங்குவாள்.

சனிக்கிழமை அன்று காலையில் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கு 11 நெய் தீபங்களை ஏற்றி வைத்து 11 முறை அவரை வலம் வந்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடுவதன் மூலம் விநாயகப் பெருமான் நமக்கு நல்ல வாழ்க்கையை அருளுவார். நல்ல வாழ்க்கை பெறுவதற்கு நிறைவான செல்வம் தேவை என்பதால் நிறைவான செல்வமும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியது தான் பசுமாடு. இந்த பசு மாட்டிற்கு நாம் பூஜைகள் செய்வதன் மூலம் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்வதாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பசு மாட்டிற்கு மாலை வேளையில் உணவளிப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய பூஜை அறையில் கண்டிப்பான முறையில் திருப்பதி வெங்கடாசலபதியின் புகைப்படம் இருக்கும். அவ்வாறு இருக்கும் வெங்கடாசலபதி புகைப்படத்தில் பத்மாவதி தாயாரும் சேர்ந்து இருப்பது போல் வாங்கி வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம்முடைய வீட்டில் என்றும் செல்வம் நிரந்தரமாக நிலைத்திருக்கும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு மல்லிகை எண்ணெயுடன் செந்தூரத்தை கலந்து பூச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆஞ்சநேயர் நமக்கு செல்வ செழிப்பை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது மேலும் அன்றைய தினம் அவருக்கு துளசி மாலையை சாற்றி வழிபட வேண்டும்.

மேலும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய முக்கோண துணி ஒன்றை எடுத்து அதில் ராம் என்று மஞ்சள் நிறத்தில் எழுதி வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் செல்வ செழிப்பு நிலையாக நிலைத்து இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை தீர்க்கும் முருகப்பெருமானின் பாடல்.

மிகவும் எளிமையான இந்த வழிமுறைகளை நாமும் நம் இல்லங்களில் பின்பற்றி வந்து நம்முடைய இல்லத்தில் செல்வ செழிப்பை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்வோம்.

- Advertisement -