வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க

amman vasal
- Advertisement -

தமிழ் மாதங்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் தை மாதத்திற்கு இந்த சிறப்பு அம்சங்கள் சற்று கூடுதலாகவே உள்ளது என்றே சொல்லலாம். இந்த தை மாதத்தில் வரக் கூடிய அனைத்து பண்டிகைகளும் விரத நாட்களும் மிகவும் விசேஷமானது. அந்த வகையில் அம்பிகை வழிபாட்டிற்கு ஆடி மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமையும் தை மாதத்தில் வரக் கூடிய வெள்ளிக்கிழமையும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த தை மாத வெள்ளிக்கிழமையில் அம்பிகையின் அருள் பரிபூரணமாக கிடைப்பதுடன் அனைத்து தெய்வங்களும் நம் இல்லம் தேடி வர இந்த ஒரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்க செய்ய வேண்டியது

ஒவ்வொரு வீட்டிலும் பெண்கள் காலையில் எழுந்தவுடன் செய்யும் முதல் வேலை வாசல் கதவு திறந்து பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவது தான். ஒரு வேளை மற்ற நாட்களில் இதை தவிர்த்து விட்டாலும் வெள்ளிக்கிழமை அன்று இதை கட்டாயமாக அனைவரும் செய்து விடுவார்கள்.

அப்படி நாளை செய்யும் போது இந்த ஒரு விஷயத்தையும் சேர்த்து செய்யுங்கள். அதற்கு இன்றைய தினம் இரவு உறங்கும் முன் ஒரு டம்ளரில் நல்ல சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் தூள், கல் உப்பு, வேப்பிலை மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து விடுங்கள். வேப்பிலை கிடைக்காத பட்சத்தில் மஞ்சள், கல் உப்பு இரண்டையும் சேர்த்தால் மட்டும் போதும்.

- Advertisement -

அடுத்து காலையில் எழுந்தவுடன் முதலில் முன் வாசல் கதவை திறக்காமல் பின் வாசல் கதவை திறக்க வேண்டும். அப்படி பின் வாசல் கதவை திறக்கும் போது மூதேவி ஆனவர் நம் வீட்டை விட்டு வெளியேறிவார். அதன் பிறகு தான் முன் வாசலை திறந்து விட வேண்டும். அப்போது தான் மகாலட்சுமி தாயார் உள்ளே வருவார் என்றது ஐதீகம் உண்டு.

அப்படி வாசல் கதவை திறக்கும் போது ஓம் வரலட்சுமி நமஹ என்ற இந்த ஒரு வார்த்தையை மறக்காமல் சொல்லுங்கள். இதனால் உங்கள் வீட்டிற்கு சுபிட்சத்தை தேடி கொடுக்கும். அதன் பிறகு வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்த அந்த தண்ணீரை வாசலில் தெளித்து விடுங்கள் அதன் பிறகு துடப்பம் வைத்து தள்ளக்கூடாது.

- Advertisement -

நீங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தால் இந்த தண்ணீரில் துணியை நனைத்தெடுத்து வாசலை துடைத்து விடுங்கள். இதை செய்த பிறகு வாசலில் கோலம் போட்டு விளக்கு ஏற்றுங்கள். இந்த விளக்கு ஏற்றும் இடத்திலும் கட்டாயமாக ஒரு கோலம் போட வேண்டும். இந்த விளக்கிற்கும் பூ வைத்து தீபாராதனை காட்ட வேண்டும்.

நாளைய தினம் இந்த முறையில் வாசலில் தண்ணீர் தெளித்து கோலம் போட்டு தீபம் ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம் இல்லம் தேடி வருவார் என்று சொல்லப்படுகிறது அது மட்டும் இன்றி இதில் கலந்து இருக்கும் மஞ்சள் வேப்பிலை இவை எல்லாம் அம்பிகையின் வழிபாட்டிற்கு மிகவும் உரித்தானது.

இதனால் அனைத்து தெய்வங்களும் உங்கள் இல்லம் தேடி வரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இத்துடன் கல் உப்பு கலந்திருப்பதால் உங்கள் வீட்டில் சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதோடு கண் திருஷ்டி போன்றவை அனைத்தும் விலகும் நல்ல ஆற்றலானது உங்கள் இல்லம் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பண வரவு அதிகரிக்க தீபம்

நாளை தினம் தை வெள்ளியில் நீங்கள் செய்யக் கூடிய இந்த ஒரு சிறிய மாற்றமானது உங்கள் இல்லத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -