பணப்பெட்டியில் பணம் சேர பரிகாரம்

kula dheivam vilaku
- Advertisement -

வீட்டில் பணம் நகைகள் அதிகரித்து சுபிட்சமாக இருக்க வேண்டும் எனில் மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் நிச்சயமாக தேவை. ஆகையால் தான் இன்றளவும் நாம் இந்த தாயாரின் பூஜைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தும் அதிக சிரத்தையுடனும் வழிபாடு செய்து வருகிறோம்.

அப்படி செய்வதுடன் சேர்த்து அந்தப் பொருட்களை வைக்கும் இடத்தில் மகாலட்சுமி தாயாருக்கு உகந்த இந்த பொருட்களையும் வைக்கும் போது பண வரவும் நகையும் குறையாமல் பெருகிக் கொண்டே செல்லும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பொருட்கள் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் பணம் நகை பெருக

எல்லோர் வீட்டிலும் பணமாக இருக்கட்டும், நகையாக இருக்கட்டும் அதை வைக்கக் கூட இடம் பீரோவாக தான் இருக்கும். சில இடங்களில் பணப்பெட்டி நகைப்பெட்டி என தனித்தனியாக இருக்கும். பெரும்பாலானோர் வீட்டில் பீரோவில் தான் இருக்கும். ஆகையால் அந்த பீரோவை முதலில் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிக்க வேண்டும்.

அடுத்து பணமோ நகையோ வைக்கும் இடத்திற்கு அருகில் மகாலட்சுமி தாயாரின் படத்தை ஒட்டி வைக்க வேண்டும். இந்தப் படத்தை ஒட்டும் போது திசை பார்க்கத் தேவையில்லை. பீரோவில் நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இதை ஒட்டினால் போதும். அடுத்து விரலி மஞ்சளை வைப்பது நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இத்துடன் கோவில் பிரசாதமான விபூதி, குங்குமம், சந்தனம், போன்றவற்றை வைக்கலாம். அதிலும் குலதெய்வ கோவிலில் இருந்து இவற்றைக் கொண்டு வந்து கட்டாயமாக வைக்க வேண்டும். அப்படி குலதெய்வத்தின் அருள் பெற்ற இந்தப் பொருள்களை வைக்கும் பொழுது அப்படியே வைக்காமல் ஒரு சிறிய தப்பாவிலோ அல்லது மஞ்சள் குங்குமம் வைக்கும் சிமிழியில் போட்டு வைப்பது நல்லது. இது பல மடங்கு நல்ல பலனை தரும்.

இவற்றுடன் ஏலக்காய் வாசனை மிக்க மல்லிகை பூ போன்றவற்றை வைக்கலாம். மேலும் வலம்புரி சாங்கில் சிறிய வகைகள் உள்ளது அதில் ஒன்றை வாங்கி பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். இத்துடன் கிராம்பு, பச்சைக் கற்பூரம் துளசி இலை போன்றவற்றையும் வைக்கலாம்.

- Advertisement -

இந்தப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை நகை வைக்கும் இடத்தில் தொடர்ந்து வைக்கலாம் அல்லது முடிந்தால் அனைத்து பொருட்களையுமே கூட வைக்கலாம். நம்முடைய வழிபாட்டு முறைகளில் பெரும்பாலும் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களை வைத்து தான் பல பரிகாரங்களை செய்கிறோம்.

அந்த வகையில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தும் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த பொருட்களாக கருதப்படுகிறது. பணவரவிற்கும் பண வசியத்திற்கும் இவைகளில் ஏதேனும் ஒன்று நம்மிடம் இருந்தால் கூட போதும். பல மடங்கு நல்ல பலனைத் தரும். இதே போல பணம் வைக்கும் மணிப்பரிசிலும் இந்த ஏலக்காய், கிராம்பு, மல்லிகை மொட்டு, பச்சை கற்பூரம் போன்றவற்றை போட்டு வைக்கலாம். இதுவும் பண வசியத்தை ஏற்படுத்தி பணவரவை அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: பணத்தடை அகல கிராம்பு பரிகாரம்

அதுமட்டுமின்றி இவற்றில் உள்ள தெய்வீக ஆற்றல் வீட்டில் மகாலட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்துவதுடன் தங்க நகைகளின் பெருக்கத்தையும் அதிகரிக்கச் செய்யும். தன வசியத்திற்கும் நகை சேமிப்பிற்கும் செய்யக் கூடிய எளிய இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை நல்ல முறையில் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -