செல்வம் பெருக விநாயகர் வழிபாடு

vinayagar five rupee coin
- Advertisement -

விநாயகர் வழிபாட்டிற்கு மாதந் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தான் பெரும்பாலும் அனைவரும் தேர்ந்தெடுப்பார்கள். அதே போல் திதிகளில் சதுர்த்தி திதி விநாயகரை வழிபட மிகவும் உகந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த நாளில் விநாயகரை வழிபடும் பொழுது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செல்வம் பெருக சதுர்த்தி வழிபாடு

சதுர்த்தி அன்று காலை பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி வழிபாட்டை தொடங்க வேண்டும். விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். காலை முதல் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். இது அவரவர் உடல் நிலையை பொறுத்து.

- Advertisement -

சதுர்த்தி வழிபாடு மாலையில் தான் செய்ய வேண்டும். அதற்கு விநாயகர் படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அருகம்புல் வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக கொழுக்கட்டைகளை வைக்க வேண்டும். அடுத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி இந்த நெய்வேத்தியத்தை வைத்து விநாயகர் துதி விநாயகர் அகவல் என உங்களுக்கு தெரிந்ததை படியுங்கள்.

எதுவும் தெரியாதவர்கள் என்பவர் கள் ஓம் கணபதியே நமக என்ற வார்த்தையை மட்டும் சொல்லி வழிபாடு செய்தாலே போதும் விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த வழிபாடு செய்த பிறகு விநாயகருக்கு நெய்வேத்தியமாக வைத்து கொழுக்கட்டையை உங்கள் வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு முதலில் கொடுத்து விட்டு பிறகு நீங்கள் சாப்பிடுங்கள். அங்கு யாருக்கேனும் தானமாக தான் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்து வீட்டிலிருந்து ஒரு பச்சை நிற துணியில் ஐந்து ரூபாய் காயின் கொஞ்சம் விபூதி வைத்து முடித்தாக கட்டி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு எடுத்து சொல்லுங்கள். இதை கோவில் பூசாரியிடம் கொடுத்து விநாயகரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்த பிறகு கொண்டு வந்து உங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். கோவிலுக்கு போகும் போதும் விநாயகருக்கு அருகம்புல் வாங்கி குடுக்க மறக்காதீர்கள்.

பச்சை நிறமானது பண ஈர்ப்பை அதிகரிக்கும் குபேரருக்கு உகந்த நிறம் அதுமட்டுமின்றி இதில் வைக்கக்கூடிய ஐந்து ரூபாய் நாணயமும் குபேரருக்கு உரியது விபூதி மகாலட்சுமி தாயார் உகந்தது.இவை அனைத்தும் விநாயகர் அருளோடு உங்கள் இல்லத்திற்கு வரும் போது செல்வ வளத்தை வாரி வழங்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: எதிரி தொல்லை நீங்க கோட்டை மாரியம்மன் கோவில் பரிகாரம்

நம்முடைய துன்பங்கள் நீங்கி வாழ்வில் செல்வ வளம் பெற்று இன்பமாக வாழ விநாயகரை இப்படி வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -