வீட்டில் செல்வ சேர்ப்பு குறைவதற்கு இது கூட காரணமாக இருக்கும்! வாரம் ஒரு முறை இதைச் செய்தால் செல்வம் மிகுதியாகும் தெரியுமா?

map-lakshmi-veppilai
- Advertisement -

ஒருவருடைய இல்லத்தில் எப்பொழுதும் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றால் அந்த இல்லத்தில் மகாலட்சுமியின் அருள் கட்டாயம் தேவை. செல்வம் என்பது நகை, பணம், வஸ்திரங்கள், தானியங்கள் எல்லாவற்றையும் குறிக்கிறது. எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு வீட்டில் துஷ்ட சக்திகள் அல்லது எதிர்மறை ஆற்றல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செல்வ செழிப்பு குறைவதற்கு காரணம் என்ன? நாம் அதற்குத் தீர்வாக என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நன்றாக பணம், காசு புழங்கிக் கொண்டிருந்த வீட்டில் திடீரென பண சேர்க்கை குறைந்து விடும். பணம் மட்டும் அல்ல இரண்டு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கி குவித்த காலம் இருக்கலாம்! இப்போது அது மாறிப் போய் ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களைக் கூட மொத்தமாக வாங்க முடியாத நிலை ஏற்படலாம். அடிக்கடி, வாங்கிய தங்க நகைகள் அடகு கடைக்கு செல்வது, தங்க நகைகள் வாங்க முடியாமல் இருப்பது, வாங்கிய நகைகளை விற்பது போன்ற விஷயங்கள் தொடர்ந்து ஒரு வீட்டில் நடந்தால் அங்கு செல்வ சேர்க்கை குறைகிறது. இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

- Advertisement -

இப்படி உங்களிடம் இருக்கும் பணம், பொருள், செல்வம் ஆகியவை குறைந்து கொண்டே இருந்தால் அந்த வீட்டில் தீய சக்தி என்கிற எதிர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படுகிறது. இதை போக்குவதற்கு வாரம் ஒரு முறையாவது நீங்கள் வீட்டை நன்கு சுத்தம் செய்து துடைத்து விட வேண்டும். அப்படி துடைக்கும் பொழுது இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

சிறிய அளவிலான பக்கெட்டில் அரை டீஸ்பூன் கல் உப்பு, ஒரு இன்ச் மஞ்சள் தூள், நான்கைந்து வேப்பிலைகளை போட்டு கலந்து விடுங்கள். இதை காலையிலேயே செய்து வைத்துக் கொண்டு மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னர் வீட்டை மாப் போட்டு விடுங்கள். வீட்டை சுத்தம் செய்வதற்கு முன்னர் பாக்கெட்டில் இருக்கும் கல் உப்பு கரைந்து இருக்க வேண்டும். வேப்பிலைகளை எடுத்து விடலாம், அதன் சாறு அதில் இறங்கியிருக்கும்.

- Advertisement -

இவ்வாறாக ஒரு குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் இருக்க, தீய சக்திகளை விரட்டி அடிக்க இந்த பரிகாரம் நல்ல உபயோகமாக இருக்கும். வாரம் ஒருமுறையாவது கல் உப்பு, மஞ்சள், வேப்பிலை சேர்த்து மாப் போட்டு வந்தால் வீட்டில் எந்த விதமான துர்சக்திகள் உள்நுழைய முடியாது. அதனுடன் ஒரு துண்டு பச்சை கற்பூரம் சேர்த்து பாருங்கள், வீடு முழுவதும் தெய்வீக மணம் கமழும் படியாக இருக்கும்.

எப்பொழுதும் வீட்டை தெய்வீக மணமுடன் வைத்திருந்தால் அங்கு துஷ்ட சக்திகள் தங்க முடியாது. இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். வருமானம் பெருகும். பூஜை அறையை மட்டும் தனியாக வைத்திருப்பவர்கள் அந்த அறைக்கு மட்டும் இது போல பச்சை கற்பூரம், வேப்பிலை, மஞ்சள், கல் உப்பு சேர்த்து மாஃப் போட்டு வந்தால் அங்கு தெய்வ கடாட்சம் அதிகரிக்கும். கோவத்தில் வெளியில் நிற்கும் தெய்வங்களும் கூட, தன்னிலை மறந்து நம் வீட்டிற்குள் நுழைந்து நமக்கு அருள் புரிந்து சென்று விடுவார்கள்.

- Advertisement -