வீட்டில் செல்வம் பெருக எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபடலாம்? நான்காம் பிறையை பார்த்தால் கெட்டது நடக்குமா?

chandran-vilakku
- Advertisement -

பொதுவாக வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் மகாலட்சுமி கடாட்சம் பெருகுவதாகவும், ஐஸ்வர்யம் நிலைப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த வகையில் வீட்டில் செல்வம் பெருக, எந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்? என்கிற ஆன்மீக குறிப்பையும், நான்காம் பிறையை பார்த்தால் கெடு பலன்கள் வருமா? அதற்கான பரிகாரம் என்ன? என்பதையும் ஆன்மீக குறிப்பாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காலையில் நீங்கள் குளிக்காவிட்டாலும் பரவாயில்லை முகம், கை, கால் அலம்பி விட்டு எழுந்ததும் முதல் வேலையாக வீட்டில் பூஜை அறையில் சாதாரணமாக ஒரு விளக்கை ஆவது ஏற்றி வைக்க வேண்டும். காலை வேளையை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். நான்கிலிருந்து ஆறு மணிக்குள்ளாக நீங்கள் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்தால் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

- Advertisement -

செல்வம் செழிக்க எந்த நேரத்தில் விளக்கு ஏற்ற வேண்டும்
குளிக்காமல் விளக்கு ஏற்றலாமா? என்றெல்லாம் பலர் தயங்குவது உண்டு ஆனால் பிரம்ம முகூர்த்தத்திற்கு இந்த தடைகள் எதுவும் இல்லை. காலையில் எழுந்ததும் கதவை திறந்து வாசல் தெளித்து வண்ணக் கோலங்கள் இட்டு வீட்டிற்குள் வந்து முகம் கழுவி விட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்கலாம். அதன் பிறகு நீங்கள் மற்ற வேலைகளை எப்பொழுதும் போல் செய்யலாம். இது தீட்டு அற்ற சமயதிற்கு மட்டுமே பொருந்தும். இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பொருளாதார ரீதியாகவும், பணப்பிரச்சனை இருந்தாலும் அவை யாவும் நீங்கி செல்வம் பெருகும், மகாலட்சுமி தங்குவாள் என்பது நம்பிக்கை. அதே போல மாலை வேளையை விஷ்ணு முகூர்த்தம் என்று கூறுவார்கள்.

இந்த விஷ்ணு முகூர்த்தத்தில் ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளாக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையை வாசனை மிகுந்த சாம்பிராணி தூபம், நறுமணம் மிகுந்த பத்திகள் போன்றவற்றை ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். இவ்வாறு விஷ்ணு முகூர்த்தத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் செய்து வந்தால் செல்வ செழிப்பிற்கு பஞ்சமே இருக்காது. பிரம்ம முகூர்த்தம், விஷ்ணு முகூர்த்த நேரங்களில் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தால் வருமானம் எங்கிருந்து தான் வரும் என்று தெரியாது, அது பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கும்.

- Advertisement -

நான்காம் பிறை தரிசனத்தை நீங்கள் திடீரென பார்க்க நேர்ந்தால் கெடு பலன்கள் உண்டாகும் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது ஆனால் புராண காலங்களில் இதற்கு ஒரு பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. அதை கடைபிடித்து வந்தால் இந்த கெடு பலன் உங்களுக்கு வராது. நான்காம் பிறையை தரிசித்த அடுத்த மாதத்தில் நீங்கள் மூன்றாம் பிறையை தரிசித்து பாவங்கள் தீர பிள்ளையாரை வேண்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்தால் நான்காம் பிறையால் உண்டாகக் கூடிய கெடுபலன்கள் உங்களை அணுகாது என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

மேலும் திருமணம் ஆனவர்கள் தம்பதியராக சந்திர தரிசனம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமைக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. மூன்றாம் பிறையை குறிப்பாக தம்பதியராக தரிசிக்க பாருங்கள். மேலும் திருமணம் ஆகவில்லை என்றால் நீங்கள் உங்களுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து மூன்றாம் பிறை தரிசனம் செய்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமையும். மன சாந்தி கிட்டும். சந்திரன் மனதிற்கு அதிபதியாக இருக்கிறார் எனவே மனக்குழப்பங்கள் தீர சந்திர தரிசனம் செய்வது உத்தமம்.

- Advertisement -