வற்றாத செல்வம், ஆரோக்கியம், சந்தோசம் இவை அனைத்தும் பெற இப்படி எளிமையான முறையில் இந்த கலச வழிபாடு செய்யுங்கள். என்றென்றைக்கும் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்து இருக்கும்.

mahalakshmi kalasam
- Advertisement -

வீட்டில் எப்போதும் சந்தோஷமும் நிம்மதியும் நிலைத்திருந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் பொழுதே மகிழ்ச்சியான முறையில் புன்னகைக்க முடியும் என்றால் அந்த வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்து இருக்கிறது என்று அர்த்தம். இந்த தெய்வ கடாட்சம் வீட்டில் நிறைந்து இருந்தாலே போதும் செல்வ செழிப்பு, நோய் நொடி ஏற்ற வாழ்க்கையை வாழ்வோம் என்பதிலும் எந்த ஐயப்பாடும் இல்லை. அப்படியான ஒரு வாழ்க்கையை நாமும் வாழ வேண்டும் எனில் இந்த கலச வழிபாடு அதற்கு நல்ல ஒரு வழியை வகுத்துக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் செல்வம் நிறைந்திருக்க கலச வழிபாடு
பொதுவாக அம்மன் வழிபாடுகளுக்கு கலசம் வைத்து வணங்கும் முறை நம்முடைய வழக்கத்தில் உள்ளது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் எப்பொழுதுமே கலசம் வைத்து வழிபடும் முறையும் உள்ளது. ஆனால் இந்த கலச வழிபாடு ஆனது வீட்டில் பண வரவை ஈர்த்து குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம் என சகலத்தையும் நம்மை நாடி வர செய்யக்கூடிய அற்புதமான ஒரு கலச வழிபாடாக கருதப்படுகிறது. அதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த கலச வழிபாட்டிற்கு தேவையான பொருட்களை முதலில் வாங்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஒரு கலச சொம்பு இது மூடி போட்டதாக இருக்க வேண்டும். அடுத்ததாக ஏழு விரலி மஞ்சள், 7 கொட்டைப்பாக்கு. உலோகத்தால் ஆன இரண்டு நாகர் சிலை இது நாட்டு மருந்து அல்லது தெய்வீக பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும் இல்லாத பட்சத்தில் கொஞ்சம் பெரிய கோவில்கள் அருகில் இருக்கும் கடைகளில் இதை விற்பார்கள் இதையெல்லாம் வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த கலச வழிபாடு வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் தொடங்குங்கள். பண வரவிற்காகவும் வீட்டில் செல்வன் நலன்களை பெருக்குவதற்காக நாம் எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் அது சுக்கிர ஓரையில் செய்யலாம் அது மட்டும் இன்றி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தயாரிக்கும் மிகவும் உகந்த நாள் எனவே இரண்டும் சேர்ந்து வரும் இந்த நாளில் செய்வது மேலும் சிறப்பு. இதை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு எந்த நாளில் செய்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ருக்கிறதோ அந்த நாளில் தேர்வு செய்து கொள்ளலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த வழிபாடு செய்வதற்கு கலச சொம்பில் நீங்கள் வாங்கி வைத்த விரலி மஞ்சள், கொட்டைப்பாக்கு, நாகர் சிலை அனைத்தையும் போட்ட பிறகு கல சசொம்பின் மூடியை வைத்து மூடி விடுங்கள். இப்போது கலச சோம்பிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ஒரு சின்ன வழிபாடை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை பூஜை அறையில் வைத்தே செய்து விடலாம். அதன் பிறகு இந்த கலச சோம்பை நீங்கள் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் ஆனால் சொம்பு மேற்கு திசையை பார்த்தவாறு மட்டும் தான் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் சுக்கிர யோகம் அடித்து கோடி கோடியாக பணம் கொட்ட, இந்த ஒரு திலகத்தை மட்டும் நெற்றியில் வச்சுக்கோங்க போதும்.

இந்த கலசத்தை நீங்கள் புதிதாக வீடு கட்டி குடியேற போகிறீர்கள் என்றால் அப்பொழுது இந்த கலச வழிபாட்டை செய்தும் வைத்துக் கொள்ளலாம் அல்லது தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழில் செய்யும் இடத்திலும் வியாபார இடத்திலும் கூட இந்த கலச வழிபாடு முறையை செய்து அங்கேயே இதே போல மேற்கு திசை பார்த்து வைத்து விடலாம். இது இருக்கும் இடத்தில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -