ஒரே நாளில் சுக்கிர யோகம் அடித்து கோடி கோடியாக பணம் கொட்ட, இந்த ஒரு திலகத்தை மட்டும் நெற்றியில் வச்சுக்கோங்க போதும்.

sukkiran
- Advertisement -

சில பேர் ஓவர் நைட்ல ஒபாமாவா மாறிடுவாங்க. ஆமாங்க அதிர்ஷ்டம் என்பது எந்த ரூபத்தில் யாருக்கு எப்படி வரும் என்றே சொல்ல முடியாது. உங்களுக்கான அதிர்ஷ்டம் இந்த பதிவின் மூலம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. போனபோக்கில் ஏதோ ஒரு வேலையை செய்வோம். ஆனால் அந்த வேலையின் மூலம் நம்முடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். குப்பையில் இருப்பவன் கோபுர உச்சிக்கு சென்று விடுவான். ஆனால் அதே அதிர்ஷ்டம், தலைகீழாக மாறினால் கோபுரத்தில் இருப்பவன் குப்பைக்கு நிச்சயம் வந்து தான் ஆக வேண்டும். வாழ்க்கை என்பது ஒரு சக்கரம். மேலே இருப்பவன் கீழே வருவதும், கீழே இருப்பவன் மேலே போவதும் இயல்பு. என்ன சினிமா டயலாக் மாதிரி இருக்குதா. ஆனாலும் இதற்கு பின்னால் ஒரு உண்மை இருக்கிறது.

அந்தஸ்து உயர்ந்து விட்டது என்று ஆகாயத்தில் மிதக்கவும் கூடாது. அந்தஸ்து குறைந்துவிட்டது என்று அதல பாதாளத்தில் குதித்து கவலைப்படவும் கூடாது. சரி, உங்களுக்கான அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வர வேண்டுமா. சுக்கிர யோகம் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா. ஒரே நாளில் நிறைய பணம் சம்பாதிக்கக்கூடிய யோகத்தை பெற வேண்டுமா. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் அழகான பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சுக்கிர வசிய திலகம் தயார் செய்யும் முறை:
இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் மூன்று. அரகஜா, ஏலக்காய், செம்பருத்தி பூவின் மகரந்தம். அரகஜா நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். முழு 3 ஏலக்காயை பிரித்து உள்ளே இருக்கும் அந்த கருப்பு நிற விதையை மட்டும் இடித்து தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி பூவுக்கு மேலே காம்பு போல நீண்டு வரும் அல்லவா. நடுவே இருக்கக்கூடிய அந்த மகரந்தத்தை மட்டும் கைகளால் உருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

சின்ன உரலில் கொஞ்சம் அரகஜா, ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதை தூள், செம்பருத்தி பூ மகரந்தம், இந்த மூன்றையும் போட்டு லேசாக மசித்து விட வேண்டும். சூப்பரான ஒரு மை உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை எடுத்து ஒரு சின்ன டப்பாவில் ஸ்டோர் செஞ்சுக்கோங்க. பிளாஸ்டிக் டப்பாவில் போடலாம். வெள்ளி டப்பாவில் போடலாம். சில்வர் இரும்பு சம்பந்தப்பட்ட டப்பாவில் போட்டால் இந்த மை பலன் தராது.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, குலதெய்வத்தையும் சுக்கிர பகவானையும் மனதார நினைத்து, இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இது கருப்பு நிறத்தில் மை போலத்தான் இருக்கும். இருந்தாலும் உங்களால் இதை எல்லோருக்கும் தெரியும் படி நெற்றியில் வைத்துக் கொள்ள முடியாது என்றால், இந்த கருப்பு திலகத்தை இட்டுவிட்டு அதற்கு மேலே குங்குமம் இட்டுக் கொள்ளலாம்.

அதுவும் முடியாது என்னால் நெற்றியில் பொட்டே வைத்துக் கொள்ள முடியாது என்பவர்கள் இதை அப்படியே லேசாக உச்சந்தலையில் தடவிக் கொண்டாலும் சூப்பரான பலன் கொடுக்கும். ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த மையை பயன்படுத்தலாம். நல்லதுக்காக மட்டும், நல்லதை நினைத்து செய்யக்கூடிய காரியங்களில் வெற்றி பெற இந்த மை உங்களுக்கு நிச்சயம் பயன்படும்.

இதையும் படிக்கலாமே: கடல் அளவில் இருக்கும் கடனில் இருந்து கரையேற தேனை இந்த நாளில் வாங்கி வந்து இப்படி செய்தாலே போதும். விரைவில் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.

அடுத்தவர்களை வீழ்த்த, தொழில் பொறாமையில் அடுத்தவர்கள் கெட்டுப் போக வேண்டும் என்றும், தான் மட்டும் தான் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணத்திலோ இதை செய்தால் நிச்சயம் பலன் கொடுக்காது. ஆனால் இந்த திலகம் உங்களுக்கு நிச்சயம் சீக்கிரத்தில் சுக்கிர யோகத்தை தேடி வந்து தந்துவிடும். எல்லோருடைய நலனையும் கருதி நன்மையை மட்டுமே நினைத்து நாம் செய்யக்கூடிய பரிகாரம் நமக்கு பல மடங்கு நன்மையை தரும் என்ற தகவலோடு இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -