அடர்த்தியான முடிக்கு இந்த 2 இலையை மட்டும் நல்லா அரைச்சு தேச்சி குளிச்சு பாருங்க! ஒரு முடி கூட அதுக்கப்புறம் கொட்டவே கொட்டாது காடு போல வளர ஆரம்பிக்கும்.

hair-growth-sembaruthi
- Advertisement -

தலைமுடி வேகமாக உதிர்வது இன்று பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது. 40 வயதிற்கு மேல் மெல்ல உதிர வேண்டிய மூடி 25 இல் இருந்து முப்பதுக்குளே கொட்டி விடுகிறது. அந்த அளவிற்கு அதி வேகமாக இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இப்படியான முடி கொட்டுதல் பிரச்சனையை உடனடியாக தடுத்து நிறுத்தக்கூடிய மூலிகை மருந்தாக செயல்படக்கூடிய தன்மை இந்த இரண்டு இலைகளுக்கு உண்டு. அவை என்னென்ன இலைகள்? அதை பயன்படுத்தும் முறை என்ன? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

எல்லோருக்குமே தன்னுடைய கூந்தல் அடர்த்தியாக கருகருவென நீண்டதாக வளர வேண்டும் என்பது தான் விருப்பமாக இருக்கும். ஆணாக இருந்தால் முடி கொட்டாமல், முன் தலையில் வழுக்கை விழாமல் நல்ல ஆரோக்கியமான கூந்தல் கருகருவென இருக்க வேண்டும் என்பதைத் தான் விரும்புவர். இப்படி ஆண், பெண் இன பாகுபாடு இன்றி இருவரும் பயன்படுத்தக் கூடிய வகையிலான இந்த ஹேர் பேக் பாரம்பரியமாக நாம் பயன்படுத்தி வரும் ஒரு முறை தான். புதிதாக ஒன்றும் நாம் செய்யப் போவது கிடையாது, ஆனால் அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதை இனி பார்ப்போம்.

- Advertisement -

தலைமுடியின் சீரான வளர்ச்சிக்கு ரொம்பவே சிறந்த மூலிகையாக கருதப்படுவது செம்பருத்தி இலை ஆகும். இந்த செம்பருத்தி இலையில் இருக்கக்கூடிய சத்துக்கள் அனைத்தும் நம்முடைய வேர்கால்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு முடிக்கும் ஊட்டச்சத்து கொடுக்கக் கூடியது ஆகும். எனவே செம்பருத்தி இலையை இரண்டு கைப்பிடி அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்கு சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ளுங்கள்.

ரெண்டு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி இலை எடுப்பவர்கள், ஒரு கைப்பிடி அளவிற்கு கறிவேப்பிலையை எடுக்க வேண்டும். பச்சையாக இருக்கும் இந்த கருவேப்பிலை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முடி மிகவும் நீண்டதாக அடர்த்தியானதாக இருந்தால் நிறைய தேவைப்படும் எனவே அதற்கு ஏற்ப இதன் அளவுகளை அதிகரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

2:1 என்கிற ரேஷியோவில் செம்பருத்தி இலை மற்றும் கருவேப்பிலை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசான பேஸ்ட் போல கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அரைத்து எடுக்க வேண்டும். மிக்ஸியில் அரைப்பதை காட்டிலும் உங்களிடம் அம்மிக்கல், ஆட்டுக்கல் இருந்தால் அதில் போட்டும் நீங்கள் அரைத்து எடுக்கலாம். அரைத்து எடுத்த இந்த விழுது பேஸ்ட் போல இருக்க வேண்டும். இதை உங்களுடைய வேர்கால்கள் முதல் முடி முழுவதும் தடவி வர வேண்டும். நுனி வரை எல்லா இடங்களிலும் நன்கு தடவிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
1 ரூபாய்க்கு இதை வாங்கினால் போதும் உங்களுடைய முகம் சாஃப்ட் அண்ட் ஷைனிங்கா 10 நிமிஷத்திலேயே மாறிடும்! ஒரே நாளில் ரிசல்ட் கொடுக்கும் ஃபேஸ் பேக்!

பின்னர் இதை கொண்டை போல கட்டி தலையில் ஒரு கவர் போட்டுக் கொள்ளுங்கள். இதை அப்படியே 45 நிமிடம் விட்டுவிடுங்கள். 45 நிமிடம் நன்கு காய விட்டால் முடி முழுவதும் இதனுடைய சத்துக்கள் முழுமையாக சென்றடையும். அதன் பிறகு நீங்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் தலைமுடியை அலச வேண்டும். மேலும் ஷாம்பு போன்ற செயற்கையான பொருட்களை பயன்படுத்த வேண்டாம். இது போல வாரம் ஒரு நாள் நீங்கள் சீயக்காய் போட்டு இந்த பேக்கை அலசினால் போதும், முடி சட்டுனு உதிர்வது நின்றுவிடும். அது மட்டும் அல்லாமல் காடு போல கருகருவென அடர்த்தியாகவும் வளரும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, ஆச்சரியப்படுவீங்க!

- Advertisement -