சீரான வருமானத்தை பெற முருகன் வழிபாடு

murugan1
- Advertisement -

வாரத்துல ஏழு நாளும் முருகனை கும்பிடலாம். தப்பு கிடையாது. ஆனா அதற்கான நேரமும் காலமும் நமக்கு சரிப்பட்டு வராது. தினமும் அவசர அவசரமாக வேலைக்கு போறவங்க, வீட்டு வேலை பார்ப்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரி போகணும், அப்படின்னும் போது தினமும் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது சில பேருக்கு செட்டாகாது. வீட்டில் இருந்தபடியே தினமும் முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள் நல்லது. சரி, வாரத்தில் ஒரு நாள் கோவிலுக்கு போகலாம்.

வருமானத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது, மாத சம்பளத்திற்கு திண்டாட்டம் வரக்கூடாது, வேலையில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை அடுத்த மாதம் செலவுக்கு என்ன செய்வது என்ற சிந்தனையே இருக்கக் கூடாது, அடுத்த மாசம் வருமானம் இல்லை என்றாலும், செலவை சமாளிப்பதற்கு உண்டான இருப்பு நம் கையில் இருக்க வேண்டும். இதற்கு முருகனை எந்தக் கிழமையில் வழிபாடு செய்வது.

- Advertisement -

நிரந்தர வருமானம் பெற முருகர் வழிபாடு

திங்கட்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 வரை முருகப்பெருமான் சன்னதியில் நீங்க இருக்கணும். இந்த 1 மணி நேரமும் முருகன் கோவிலில் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. முடியாது என்றால் 10 நிமிடம் செலவு செய்தாவது இந்த வழிபாட்டை செஞ்சிருங்க. முருகா என்னுடைய தேவைக்கு ஏற்ப பணத்தை கொடு முருகா, என்று கேட்டால், நிச்சயம் முருகப்பெருமான் உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி வைப்பார்.

2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அந்த முருகன் கோவிலில் அமர்ந்து ‘ஓம் ஸ்ரீ சரவணபவ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். முருகனுக்கு உங்கள் கையால் முடிந்த பூக்களை வாங்கிச் செல்லுங்கள். திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு நிச்சயம் வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது‌. வந்த வருமானம் வீண் செலவு ஆகாது. சேமிப்பு இரட்டிப்பாகும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தானே முருகர் வழிபாட்டிற்கு உகந்தது என்று சொல்லுவார்கள். இது என்ன திங்கட்கிழமை முருகர் வழிபாடு என்று சில பேர் சிந்திக்கலாம். கடன், நிலம், வீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு செய்யலாம். அந்த மகாலட்சுமியை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க, வந்த மகாலட்சுமியை நம்மிடம் நிலையாக தங்க வைக்க, திங்கட்கிழமை முருகர் வழிபாடு செய்து பாருங்கள்.

உங்களுக்கே வருமானத்திலும் சேமிப்பிலும் நல்ல மாற்றம் தெரியும். இந்த வழிபாட்டை எத்தனை வாரம் தொடர்வது. கணக்கெல்லாம் உங்கள் கையில் தான் இருக்கிறது. மூன்று வாரம் திங்கட்கிழமை, முருகரை இப்படி வழிபாடு செய்து விட்டால், நாலாவது வாரம், ‘நீ கோவிலுக்கு வராத அப்படின்னு முருகனே வந்து தடுத்தால் கூட’ விட மாட்டீங்க. கோவிலுக்கு திங்கட்கிழமை காலையில ஓடிப் போயிடுவாங்க. அந்த அளவுக்கு நல்லதை கொடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்த சூட்சமமான வழிபாடு தான் இது.

- Advertisement -

மனம் உவந்து முருகன் மீது பற்றோடு, முருகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு, எந்த நாளிலும் முருகன் ஏமாற்றத்தை கொடுக்கவே மாட்டான். அதை ஒரு சில வார்த்தைகளால் இந்த பதிவில் சொல்லி முடித்து விட முடியாது. முருகனைக் கும்பிட்டு பலனை அனுபவித்த, முருக பக்தர்களுக்கு மட்டும்தான் அந்த முருகப்பெருமானின் அருமை பெருமைகள் தெரியும்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை விலக பைரவர் வழிபாடு

நீங்களும் முருக பக்தனா மாறனுமா. அவனுடைய திருவிளையாடல்களை காண வேண்டுமா. யோசிக்காமல் முதல் வேலையா நாளைக்கு எழுந்து கோவிலுக்கு போங்க. நல்லதே நடக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -