தடைகளை விலக்கும் ஆஞ்சநேயர் அர்ச்சனை

senthoora archanai
- Advertisement -

தெய்வ வழிபாட்டிற்கு என்று பல மகத்துவமான பலன்கள் இருக்கின்றன. யார் ஒருவர் தன்னுடைய முயற்சியை விடாமல் செய்து கொண்டு வருகிறாரோ அவருடைய வாழ்க்கையில் தெய்வ வழிபாட்டால் பல நன்மைகள் ஏற்படும். முயற்சி செய்யாமல் இருந்து கொண்டு தெய்வத்தை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் எந்த பலனும் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. அப்படி நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கவும் அந்த முயற்சிகள் வெற்றி அடையவும் ஆஞ்சநேயருக்கு செய்யக்கூடிய அர்ச்சனையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

இன்றளவும் இந்த உலகத்தில் நித்திய சிரஞ்சீவியாக வாழக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். இது புராணங்களில் கூறப்பட்டிருக்கும் உண்மையாகும். அப்படிப்பட்ட சிரஞ்சீவியான ஆஞ்சநேயரை நாம் மனதார நினைத்து வழிபாடு செய்து அவரை அழைத்தால் கண்டிப்பாக முறையில் அவர் நமக்கு அருள் புரிவார் என்பது நிதர்சனமான உண்மை. அப்படிப்பட்ட ஆஞ்சநேயருக்கு நாம் எந்த முறையில் அர்ச்சனை செய்தால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் நம்முடைய இல்லங்களில் செய்தால் போதும். நம் வீட்டில் ஆஞ்சநேயரின் படம் இருந்தால் அந்த படத்தை சுத்தம் செய்து படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு படத்திற்கு பூக்கள், துளசி போன்றவற்றை வைத்து அவருக்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிறகு ஆஞ்சநேயருக்கு என்று தனியாக ஒரு அகல் விளக்கை எடுத்து வைத்து அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். ஆஞ்சநேயரின் படம் இல்லாதவர்கள் அகலை வைத்து தீபம் ஏற்றி அந்த தீபத்தில் ஆஞ்சநேயரை ஆவாகனம் செய்ய வேண்டும்.

அந்த அகல் விளக்கிற்கு முன்பாக வெள்ளி கிண்ணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளி குங்குமச்சிமிழ் இருந்தால் கூட வைத்துக் கொள்ளலாம். வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களில் இல்லை என்பவர்கள் பெரிய வெற்றிலையாக ஒரு வெற்றிலையை வைத்துக் கொள்ளலாம். கடையிலிருந்து செந்தூரத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தமான திலகமாக செந்தூரம் திகழ்கிறது.

- Advertisement -

இப்பொழுது இந்த செந்தூரத்தை நம்முடைய மோதிர விரல் மற்றும் கட்டை விரலால் எடுத்து சிறிது சிறிதாக அந்த கிண்ணத்தில் போட வேண்டும். அவ்வாறு போடும்பொழுது ஆஞ்சநேயரின் போற்றிகள் தெரிந்தவர்கள் அந்தப் போற்றிகளை கூறி போடலாம். போற்றிகள் தெரியாதவர்கள் “ஓம் ஆஞ்சநேயா நமஹ” என்னும் நாமத்தை கூறியவாறு சிறு சிறு துளிகளாக செந்தூரத்தை அந்த கிண்ணத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இவ்வாறு நாம் அர்ச்சனை செய்யும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை பாக்கு ஏதாவது ஒரு பழம் வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை சம்பந்தப்பட்ட நபர்கள்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அர்ச்சனை செய்த இந்த செந்தூரத்தை யாருக்கு பிரச்சினை இருக்கிறதோ அவர்கள் தங்களின் நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் மிகவும் முக்கியமான ஒன்று.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற வாராஹி தீப வழிபாடு

இப்படி தினமும் செந்தூரத்தை வைத்து ஆஞ்சநேயரை நினைத்து அர்ச்சனை செய்து வந்தோம் என்றால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் ஆஞ்சநேயர் விளக்குவார். நல்ல வழியை காட்டுவார்.

- Advertisement -