இன்று செப்டம்பர் மாதத்தில் வந்திருக்கும் அதிசக்தி வாய்ந்த ஒரே ஒரு மைத்ரேய முகூர்த்தம். புரட்டாசி மாத சனிக்கிழமையோடு வந்திருப்பதால், இந்த நேரத்தை யாரும் தவற விடாதீங்க.

date
- Advertisement -

கடனை சீக்கிரம் அடைப்பதற்காக சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். வழக்கமாக மாதத்தில் இரண்டு நாட்கள் கூட இந்த மைத்ரேய முகூர்த்தம் நமக்கு வரும். ஆனால் குறிப்பிட்ட இந்த செப்டம்பர் மாதத்தில் ஒரே ஒரு மைத்ரேய முகூர்த்தம் தான் நமக்கு வந்திருக்கிறது. அதுவும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை தினமான இன்று பெருமாளுக்கும் மிகவும் உகந்த நாளாக இருப்பதால், பெருமாளை நினைத்து மைத்திரேய முகூர்த்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் கடன் பிரச்சனை கூடிய சீக்கிரத்தில் தீரும். இன்றைய தினம் மைத்ரேய முகூர்த்தம் வரக்கூடிய நேரம் என்ன. நாம் செய்யக்கூடிய பரிகாரம் என்ன தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கட்டாயமாக ஒரு பிரியாணி இலை, ஒரு கவர் தேவை. மொய்க்கவர் அல்லது பிரவுன் கவர் எதுவாக இருந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய விருப்பம்தான். குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பிரியாணி இலையில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி உள்ளீர்களோ, யாருக்கு கடனை திருப்பித் தர வேண்டுமோ அந்த நபரின் பெயரை எழுதி விட்டு, அவருக்கு கொடுக்க வேண்டிய கடனை சீக்கிரம் கொடுக்க வேண்டும் என்று எழுத வேண்டும்.

- Advertisement -

உதாரணத்திற்கு அந்த பிரியாணி இலையில் ஒரு பேனாவை கொண்டு ‘ராஜேஷிடம் வாங்கிய 1,00,000 கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும்’ என்று எழுதி அந்த கவரில் பிரியாணி இலையை போட்டு விட வேண்டும். அந்த கவருக்கு உள்ளே ஒரு பச்சை கற்பூரம், ஏலக்காய் 2, துளசி இலை போட்டு குறிப்பிட்ட அந்த நபரின் கையில் நீங்கள் கடனை திருப்பிக் கொடுப்பதாக நினைத்து 100 ரூபாயோ, 200 ரூபாயோ எடுத்து அந்த கவரில் போட்டு மடித்து உங்களுடைய வீட்டில் எங்கேயாவது பத்திரமாக எடுத்து வைத்து விடுங்கள்.

உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கடன் இருந்தாலும் சரி, ஒரு லட்ச ரூபாய் கடன் இருந்தாலும் சரி இந்த பரிகாரத்தை செய்தால் உங்களுடைய அந்த குறிப்பிட்ட கடன் பிரச்சனை சீக்கிரம் தீரும். கடனை திருப்பித் தருவதற்கு உண்டான வருமானம் உங்களுக்கு கிடைக்கும். அல்லது ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்டிக் கொடுக்கும். அதற்கு உண்டான பரிகாரம் தான் இது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: நாளை மஹாளய அமாவாசை திதியில் இதை மட்டும் செய்தாலே போதும். முன்னோர்களின் ஆசிர்வாதமும் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

குறிப்பிட்ட நபருக்கு நீங்கள் மொத்த தொகையை திருப்பிக் கொடுக்கும் போது, இந்த கவரில் போட்டு வைத்த பணத்தையும் எடுத்து போட்டு சேர்த்துக் கொடுக்க வேண்டும். மாதம் தோறும் மைத்ரேய முகூர்த்தம் வரும் அல்லவா. அப்போது இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். தனித்தனியாக ஒரு கவரில், நூறு நூறு ரூபாயாக, தொடர்ந்து போட்டு வரலாம். 100 ரூபாய் என்பது ஒரு உதாரணத்திற்கு தான். நீங்கள் பத்து ரூபாய் போட்டால் கூட பரிகாரம் உங்களுக்கு பலன் தரும்

பத்து மாதம் இந்த பரிகாரத்தை செய்த பிறகு, பத்து கவர் சேர்ந்தாகிவிட்டது எனும் பட்சத்தில், பத்து கவரில் உள்ள ரூபாயை மட்டும் சேகரித்து ஒரு கவரில் போட்டுக்கோங்க. அந்த 10 பிரியாணி இலைகளை நெருப்பில் போட்டு பொசுக்கி சாம்பலை தண்ணீரில் கரைத்து கீழே ஊற்றி விட வேண்டும். பரிகாரம் அவ்வளவுதான். முடிந்தால் இன்று பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளின் ஆசீர்வாதத்தை பெற்று அங்கு கொடுக்கக் கூடிய துளசி இலையை கொண்டு வந்து இந்த கவரில் போட்டி வைப்பது இன்னும் சிறப்பு.

சரிங்க, இன்றைய மயித்ரேயயே முகூர்த்த நேரம் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. இன்று இரவு 7:14 மணி முதல் 9:02 மணி வரை இந்த மைத்ரேய முகூர்த்த நேரம் நமக்கு உள்ளது. இரவு 8.00 மணி போல இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து கொள்ளலாம். நம்பிக்கையோடு செய்யுங்கள். பல கோடி ரூபாய் கடன் பிரச்சனையை கூட தீர்த்து வைக்கக்கூடிய சக்தி இந்த ஒரு சின்ன பரிகாரத்திற்கு உண்டு என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -