கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமை பரிகாரம்

murugan one rupee coin dheepam
- Advertisement -

பங்குனி மாதம் முருகப் பெருமான் வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பங்குனி மாதத்தில் வரக் கூடிய சஷ்டி, கிருத்திகை, உத்திரம் போன்றவை அனைத்துமே முருகப்பெருமானுக்கு சிறப்பு வாய்ந்த நாட்கள் தான். அதே போல பங்குனி மாதத்தில் வரக் கூடிய செவ்வாய் கிழமைகளும் முருகருக்கு மிகவும் உகந்தது.

அப்படி நாளைய தினம் பங்குனி மாதத்தின் செவ்வாய்க்கிழமையில் நம்முடைய கிரக தோஷங்கள் தடைகள்நீங்க முருகப்பெருமானை வணங்கலாம். அது எப்படி என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்தது கொள்ளலாம்.

- Advertisement -

கிரக தோஷங்கள் நீங்க வழிபாடு

செவ்வாய்க்கிழமை எப்படி முருகப்பெருமானுக்கு உகந்த தினமோ, அதே போல் முருகப் பெருமானுக்குரிய கிரகமான செவ்வாய் கிரகத்திற்கும் அன்றைய தினம் மிகவும் விசேஷமானது. ஆகையால் செவ்வாய்க்கிழமையில் நாம் எப்போது வழிபட்டாலும் என்ன வழிபாடு செய்தாலும் செவ்வாய் பகவானையும் சேர்த்து வணங்க வேண்டும்.

இந்த வழிபாடு செய்வதற்கு உங்கள் வீட்டின் அருகில் உள்ள முருகன் ஆலயத்தை ஏதேனும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஆலயத்தில் நவகிரகம் இருந்தால் நல்லது இல்லையெனில் நவகிரகம் இருக்கும் ஆலயத்திற்கு செல்லுங்கள். அப்படி செல்லும் போது கையில் கொஞ்சம் துவரம் பருப்பு, ஒரு ரூபாய் நாணயம், இரண்டு அகல் விளக்கு, நெய், பஞ்சத்திரி இவற்றுடன் ஒரு தொன்னையும் கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

ஆலயத்தில் நவகிரகத்தில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். நீங்கள் கொண்டு சென்றிருக்கும் தொன்னையில் முதலில் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். அதற்கு மேல் துவரம் பருப்பை வைத்து அதை செவ்வாய் முன்பு வைக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு அகல் விளக்கையும் வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அதன் பிறகு நவகிரகத்தை சுற்றி வந்து செவ்வாய் பகவானை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இத்துடன் அன்றைய தினத்தில் முருகப்பெருமானையும் தவறாமல் வேண்டி வணங்க வேண்டும். நாளை தொடங்கப்படும் இந்த வழிபாடை ஏழு செவ்வாய் கிழமையில் தொடர்ந்து செய்ய வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமையில் அந்த நாளுக்குரிய தெய்வங்களையும், கிரகங்களையும் அவர்களுக்கு உரிய தானியங்கள் என அனைத்தையும் சேர்த்து செய்யப்படும் இந்த வழிபாடு சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ராஜ ராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவில் மகிமை

இந்த முறையில் வழிபடும் போது கிரக தோஷங்கள் நீங்குவதுடன் திருமண தடை குழந்தை பேரு தடை போன்றவை நீங்க வீடு வாசல் சொத்து சேர்க்கக் கூடிய யோகங்களும் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பின் இந்த வழிபாட்டை நீங்களும் செய்து பலன் அடையலாம்.

- Advertisement -