பட்டு நூலை போல ஷைனிங்கா நல்லா கருகருவென்னு அடர்த்தியாக நீளமான முடி வளர்ச்சியை பெற இது போல ஒரு பெஸ்ட்டான சிம்பிள் ரெமிடி இருக்க வாய்ப்பே இல்லை மிஸ் பண்ணிடாதீங்க

- Advertisement -

கருக்கருன்னு அழகிய பட்டு போன்ற முடி வளர்ச்சியை பெற வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் இப்படி ஒரு முடி வளர்ச்சியை பெற வேண்டும் என நினைப்பதே பேராசை என் அளவிற்கு சூழ்நிலை மாறி விட்டது. ஆனால் இப்போதும் நாம் சில வழிமுறைகளை தொடர்ச்சியாக செய்தால் இது போன்ற அழகிய கருங்கூந்தலை பெறலாம். அது என்ன என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தலைமுடி நீளமாகவும் வேகமாகவும் வளர
இந்தக் குறிப்பை பயன்படுத்துவதற்கு நமக்கு தேவையான பொருட்கள் ஒரு பெரிய வெங்காயம், சின்ன வெங்காயமாக இருந்தால் பத்து சின்ன வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இது இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்து அரைத்த இந்த விழுதை வடிகட்டியில் சேர்த்து இதன் சாரை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாறில் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். இதில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தும் வேறு எந்த எண்ணையாக இருந்தாலும் அதையும் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த சாறில் ஒரு காட்டன் பஞ்சை முக்கி நனைத்து அந்த பஞ்சை வைத்து உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களில் எல்லாம் படும்படி நன்றாக ஒற்றி எடுக்க வேண்டும். அதன் பிறகு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து எப்போதும் போல உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு அலசி விட்டால் போதும். முடி பட்டுபோல மாறி இருக்கும்.

- Advertisement -

இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயமாக முயற்சி செய்ய வேண்டும். அப்போது தான் உங்களின் முடி நல்ல ஷைனிக்காகவும், அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். இதில் சேர்த்து இருக்கும் வெங்காயம் முட்டை எண்ணெய் எவை அனைத்தும் முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடியவை. அது மட்டும் இன்றி உருளைகிழங்கிற்கு முடியை மிருதுவாக மாற்ற கூடிய தன்மை உண்டு.

இதையும் படிக்கலாமே: தேவதை போல அழகாக மாற, குப்பையில் தூக்கிப் போடும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே? இது முன்னவே தெரிந்திருந்தால் மாதம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சம் பிடித்திருக்கலாம்.

முடியை அழகாக பராமரித்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கெமிக்கல் கலந்த எண்ணெய் கிரீம் போன்றவற்றை பயன்படுத்தாமல் எது போன்ற இயற்கையான முறைகளை பயன் படுத்தி பலன் அடையலாம். இது குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -