செல்வவளம் பெருக சில்லறை காசு பரிகாரம்

coins
- Advertisement -

தினம் தினம் வீட்டில் செல்வம் மழை பொழிய வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கின்றது. ஆனால் தினம் தினம் செலவுதான் ஆகிறதே தவிர, வருமானத்திற்கு நமக்கு வழி தெரியவில்லை. இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க, வருமானத்தை பெருக்க, நிறைய வழிபாட்டு முறைகள் பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இன்று ஒரு குபேர பானையை பற்றிய ரகசிய தகவலைத்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குபேர பானை என்றதுமே அதில் நிறைய பொருட்களை போட வேண்டும், நிறைய செலவு செய்து காசு கொடுத்து பரிகாரம் செய்ய வேண்டுமோ என்று பயந்து ஓடிடாதீங்க. ஒரு கைப்பிடி சில்லறை காசு இருந்தாலே போதும்.

- Advertisement -

அதை வைத்து குபேர பானை தயார் செய்துவிடலாம். வாங்க அந்த பானையை எப்படி தயார் செய்வது, அந்த சில்லறை காசுகளை எந்த முறையில் பீரோவில் வைத்தால் பணம் சேரும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த சில அரிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

செல்வம் பெருக சில்லறை காசு பரிகாரம்

முதலில் ஒரு சின்ன சொம்பு எடுத்துக்கொள்ள வேண்டும். மண் பானையாக இருந்தாலும் சரி, அல்லது பித்தளை சொம்பு, செம்பு சொம்பு எதுவாக இருந்தாலும் சரி, சொம்பின் அளவு கொஞ்சம் சிறியதாக இருக்கட்டும். ஏனென்றால் அது நிரம்ப நாம் சிலரை காசுகளை கொட்டப் போகின்றோம். இதுதான் குபேர பானை.

- Advertisement -

இந்த குபேர பானையை ஒரு வெள்ளிக்கிழமை அன்று தயார் செய்து பூஜை அறையில் வைத்து, வழக்கம் போல வெள்ளிக்கிழமை பூஜையை செய்ய வேண்டும். அந்த குபேர பானைக்கு மேலே பூக்கள் தூவி சாம்பிராணி தூபம் காண்பித்து ‘ஓம் லக்ஷ்மி குபேராய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி உருயேற்றிக் கொள்ளுங்கள். இப்போது குபேரரின் அம்சம் அந்த பானைக்கு கிடைத்துவிடும்.

வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, இந்த சில்லரை காசு போட்டிருக்கும் பானையை அப்படியே கொண்டு போய் பீரோவில் வைக்கவும். அவ்வளவுதான். பரிகாரம் முடிந்தது. அடுத்த வெள்ளிக்கிழமை அதே சொம்பை எடுத்து மீண்டும் பூஜை அறையில் வைத்து, பூஜை செய்து மீண்டும் அந்த சொம்பை வெள்ளிக்கிழமை எடுத்து பீரோவில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இதே போல தொடர்ந்து இந்த சில்லரை காசுகளை வெள்ளிக்கிழமை அன்று பூஜித்து குபேரரின் மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை வைத்தால் உங்கள் பண பிரச்சனை தீர்ந்து பீரோவில் நிறைய நிறைய செல்வங்கள் சேர தொடங்கிவிடும். எளிமையான பரிகாரம் தான். சில்லரை காசுகளை வழிபட்டு பூஜித்து கும்பிட போகின்றோம்.

நாணயங்களை வழிபாடு செய்கின்றோம் இது நமக்கு பல மடங்கு பணத்தை ஈர்த்துக் கொடுக்கப் போகின்றது. குபேரரின் ஆசிர்வாதத்தோடு இந்த எளிமையான பரிகாரம் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டத்தை மிக மிகக் குறைந்த நாட்களிலேயே சரி செய்து விடும்.

சில்லரை நாணயங்கள் என்பது கெட்டுப்போகாது. இதை நீங்கள் அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியம் கிடையாது. வருடகணக்கானாலும் அந்த சிலரை காசுகள் அப்படியே இருக்கட்டும். எத்தனை வாரம் வெள்ளிக்கிழமை பூஜை செய்கிறீர்களோ, அத்தனை வார பூஜை பலனும் அந்த சில்லரை காசுகளில் சேரும். ஆகவே உங்களுக்கு பலன் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் செல்லும்.

இதையும் படிக்கலாமே: குபேரருக்கு பிடித்த ராசிக்கள்

தேவைப்பட்டால் அந்த சிலரை நாணயங்களை போட்டு வைத்திருக்கும் சொம்பை மட்டும் மாதத்திற்கு ஒரு நாள் வெள்ளிக்கிழமை அல்லாது மற்ற கிழமைகளில் எடுத்து தேய்த்து சுத்தமாக கழுவி ஈரம் இல்லாமல் துடைத்துவிட்டு, மீண்டும் இந்த சில்லறை காசுகளை அதில் நிரப்பி வைத்துக் கொள்ளலாம். நம்பிக்கையோடு செய்து பாருங்கள், நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -