ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும். பணம் வருவதற்கு எது தடையாக இருந்தாலும் அது உடனே உடையும்.

Sivan-manthiram
- Advertisement -

பணத் தடையை உடைக்க தீர்வு என்று தேடிப்பார்த்தால் ஆன்மிகத்தில் எத்தனையோ பரிகாரங்கள் உள்ளது. சில பரிகாரங்கள் சில மனிதர்களுக்கு உடனடியாக பலனை கொடுக்கும். சில பரிகாரங்கள் சில பேருக்கு பலன் கொடுக்க கொஞ்ச காலம் எடுக்கும். இன்னும் ஒரு சில பரிகாரங்கள் சிலருக்கு பலனை கொடுக்கவே கொடுக்காது. ஆனால் எல்லா மனிதர்களுக்கும் பலன் கொடுக்கக் கூடிய ஒரு மந்திர பிரயோகத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எந்த காரணத்திற்காக கஷ்டப்பட்டு வந்தாலும் சரி, பண கஷ்டம் ஆக இருக்கட்டும், மன கஷ்டமாக இருக்கட்டும், முன்விரோத கஷ்டம், முன் ஜென்ம பாவம் சம்பந்தப் பட்ட கஷ்டம், எதுவாக இருந்தாலும் அந்த கஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு இந்த மந்திரம் ஒன்றே போதும்.

நம்முடைய கஷ்டங்களுக்கு தீர்வு தரப்போகும் அந்த மந்திரம் எது. குறிப்பிட்ட அந்த மந்திரத்தை எப்போது எந்த நேரத்தில் எப்படி உச்சரிப்பது தெரிந்து கொள்வோமா. வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்து குளித்து விடுங்கள். வியாழக் கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பு பூஜை அறையில் கட்டாயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வாசனை நிறைந்த ஊதுவத்தியை ஏற்றி வைத்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு சிறிது ஜவ்வாது இந்த பூஜைக்கு அவசியமாக தேவைப்படும். ஜவ்வாது பொடி, ஜவ்வாது பேஸ்ட் எதுவாக இருந்தாலும் அதை வாங்கி உங்களுடைய இரண்டு உள்ளங்கைகளையும் லேசாக தடவி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கைகள் வாசமாக இருக்கட்டும்.

நீங்கள் தரையில் விரிப்பில் சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதலில் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். கஷ்டத்தை போக்கும் சிவமந்திரம் உங்களுக்காக இதோ.

- Advertisement -

ஓம் நமோ நமசிவாய சர்வ குபேர வசி வசி வசி ஓம்.

மந்திரம் இவ்வளவு தாங்க. 27, 51,108 இப்படியாக ஒற்றைப்படையில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆனால் நெற்றியில்விபூதியோடு எம் பெருமானை மனதார வேண்டிக்கொண்டு கஷ்டங்கள் சுக்கு நூறாக சிதறி ஓட வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை உச்சரித்து பாருங்கள். ஒருசில வாரங்களிலேயே உங்களுடைய குடும்ப கஷ்டத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்.

பல கஷ்டங்களில் நாம் சிக்கித் தவிப்பதற்கு இந்த பணமும் ஒரு காரணமாகத் தான் உள்ளது. அந்த பண பிரச்சனையை சமாளிக்க, கடன் சுமையை குறைக்க, இந்த மந்திரம் உங்களுக்கு உதவியாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -