எந்த 6 ராசிகள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பார்கள் தெரியுமா? நீங்க ஆறுதல் தேடனும்னா இந்த ராசிக்காரங்க கிட்ட தேடுங்க!

smile-face-astro
- Advertisement -

ஒரு மனிதன் எவ்வளவு துன்பம் வந்தாலும், சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று தான் பல அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். எல்லோராலும் அப்படி இருந்து விட முடியாது, ஆனால் இவர்கள் எத்தகைய துன்பத்திலும் சிரிக்கக்கூடிய ராசிகளாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன? எந்தெந்த ராசிகள் சிரித்த முகத்துடன் இருக்கக்கூடிய ராசிகள்? என்பதைத்தான் இந்த ஜோதிடம் குறித்த தகவல்களின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எப்பொழுதும் நம்முடைய துன்பங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது தான் நல்லது. இங்கு பலரும் நம் குறைகளை கேட்டு விட்டு ஆறுதல் சொல்வதில்லை! நமக்கு பின்னால் சென்று மகிழ்ச்சியுறுகிறார்கள். எனவே கூடுமானவரை உங்களுடைய பிரச்சினைகளை கூறி மற்றவர்களிடம் ஆறுதல் தேடாமல் இருப்பதே நல்லது.

- Advertisement -

இருப்பினும் இந்த ஆறு ராசிக்காரர்கள் மனதளவில் நல்ல குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். இதற்கு காரணம் அவர்கள் ஒளி கிரகங்களாக இருப்பது தான் என்கிறது ஜோதிடம். ஒளி பொருந்திய கிரகங்கள் என்பதால் இவர்களிடத்தில் நாம் பழகும் பொழுது பாசிட்டிவ் எனர்ஜி ஆட்டோமேட்டிக்காக கிடைக்கிறது. ரிஷப ராசி, கடக ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, தனுசு ராசி, மீனம் ராசி ஆகிய இந்த ஆறு ராசிகள் ஒளி கிரகங்கள் ஆகும் எனவே இந்த ஆறு ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இதனால் சிறு சிறு பிரச்சனைகளுக்கெல்லாம் உடைந்து போவது கிடையாது. இன்முகத்துடன் சிரித்துக் கொண்டே எல்லா விதமான பிரச்சனைகளையும் கையாளுகிறார்கள்.

இவர்கள் பலாப்பழம் போன்றவர்கள். வெளியில் முட்கள் இருந்தாலும், உள்ளே இனிப்புள்ள பழம் இருக்கும் பலாப்பழத்தைப் போலவே இவர்களுடைய குணமும் இருக்கும். கோபக்காரர்களாக இருந்தாலும் இவர்களுக்குள் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள். அன்பு ஒன்றே பிரதானமாக கொண்டு இருப்பார்கள். சென்சிடிவ் குணம் கொண்டவர்களாக இருந்தாலும், போராடும் மனப்பான்மையும் கூடவே பிறந்ததாக இருக்கும். அன்பை நேரடியாக இவர்கள் காட்டுவதில்லை. உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு இருப்பார்கள். வெளியில் இவர்களை புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், உண்மையில் இவர்களுடைய குணம் என்றாவது புரியும் பொழுது ஆச்சரியப்பட தோன்றும்.

- Advertisement -

அந்த அளவிற்கு பாசக்கார ராசிகளாக இருக்கக்கூடிய இவர்களைப் போலவே லக்னத்தில் புதன், சுக்கிரன், குரு, சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருந்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. மற்ற ஆறு ராசிக்காரர்களும் இவர்களின் குணங்களைக் கொண்டிருந்தாலும், இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இணையாக இருக்க முடியாது. துன்பங்கள் வந்தாலும் சிரித்துக் கொண்டே அணுகுவதால் இவர்களுக்கு நண்பர்களின் வட்டமும் அதிகரித்து காணப்படும். இவர்களை சுற்றி எப்பொழுதும் நல்ல நட்புகள் இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசிபலன் 20/03/2023 முதல் 26/03/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

எதற்காகவும், யாருக்காகவும் அவர்களுக்கு பிடித்தவர்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பிடித்தவர்கள் திட்டினாலும், இவர்கள் மீது கோபப்பட்டாலும் அந்த நிமிடத்திற்கு மட்டுமே அதற்கான பதிலை கொடுப்பார்களே தவிர, இப்படி தனக்குப் பிடித்தவர்கள் காயப்படுத்தி இருந்தாலும் அவர்களிடமே மீண்டும் செல்லும் குணம் கொண்டவர்கள். எவ்வளவு அடித்தாலும் தாங்குவதால் இவர்களுக்கு ரோஷம் இல்லை என்று கூறி விட முடியாது. ரோஷத்தை காட்டிலும், ஈகோவை காட்டிலும் பாசம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள்! எனவே இவர்களிடம் நீங்கள் ஆறுதல் தேடினால் நிச்சயம் ஆறுதல் அடையலாம்.

- Advertisement -