சமையலறையில் தினம்தோறும் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால், வீட்டில் நல்லதே நடக்கும். தலைமுறை தலைமுறையாக உங்களைப் பின்தொடர்ந்த கஷ்டம் உங்களை விட்டு விலகும்.

kuladheivam
- Advertisement -

சில வீடுகளில் நாம் பார்த்திருப்போம், பல தலைமுறைகளாக, பெரிய கஷ்டம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எப்படி என்றால், அந்த வீட்டில் தாத்தாவும் கஷ்டப்பட்டு இருப்பார், அப்பாவும் கஷ்டப்பட்டு இருப்பார், இந்த தலைமுறையில் வாழும் வாரிசுகளும் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். வறுமை இருக்கும். இது ஒரு வகையான கஷ்டம் என்றால், சில வீடுகளில் பணம் காசுக்கு பிரச்சனையே இருக்காது. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு தீராத மன வருத்தம் இருக்கும். வீட்டில் இருக்கும் வாரிசுகளுக்கு திருமணம் நடக்காது. திருமணம் நடந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காது. குழந்தை பாக்கியம் கிடைத்தாலும் சந்தோஷமான வாழ்க்கை அமையாது. சந்தோஷமான வாழ்க்கை அமைந்தாலும் நீண்ட ஆயுள் இருக்காது. பல சிக்கல்கள் சூழ்ந்திருக்கும். இப்படி உங்கள் குடும்பத்திலும் ஏதாவது தீராத கஷ்டம் இருந்தால், இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள். நிச்சயமாக அந்த கஷ்டத்திற்கு தீராத துயரத்திற்கு விமோசனம் கிடைக்கும்.

kuladeivam

வீட்டில் இருக்கும் பெண்களின் கையால் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு உங்கள் வீட்டு சமையலறையில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை, சமையல் மேடைக்கு வலது பக்கம் வைத்துவிட வேண்டும். இப்படி இந்த சொம்பு தண்ணீரை வைக்கும்போது, மனதார உங்கள் வீட்டு குல தெய்வத்தையும் முன்னோர்களையும் நினைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் அந்த குறிப்பிட்ட கஷ்டத்தை சொல்லி, அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். (சொம்புத் தண்ணீர் அல்லது டம்ளர் அளவு தண்ணீர் நிறைவாக தான் இருக்க வேண்டும். குறைவாக இருக்கக் கூடாது. குடிக்கின்ற சுத்தமான தண்ணீரை ஊற்றி வையுங்கள்.)

- Advertisement -

தினமும் இரவு நேரத்தில் நம்மை காண்பதற்கு நம்முடைய முன்னோர்களும், நம்முடைய குல தெய்வங்களும் நம் வீட்டிற்கு வலம் வரும் என்று சொல்லுவார்கள். அப்படி வரும்போது அவர்களை நினைத்து நீங்கள் சமையலறையில் வைத்திருக்கும் இந்த ஒரு சொம்பு நிறைவான தண்ணீரில் முன்னோர்களும் குலதெய்வம் ஆவாகனமாகி உங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள்.

kuladheivam

ஓரிரு நாட்கள் இந்த பரிகாரத்தை செய்து விட்டு பலனை எதிர் பார்த்தால் நிச்சயம் நடக்காது. ஆண்டாண்டு காலமாக உங்கள் குடும்பம் அனுபவித்து வரும் கஷ்டம் எதனால் என்பது தெரியாது. யார் செய்த பாவத்தால் உங்கள் குடும்பத்திற்கு இவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தது என்று தெரியாது.

- Advertisement -

அப்படி இருக்க தொடர்ந்து உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் இந்த பரிகாரத்தை விடாமல் செய்து வந்தால், உங்களுடைய கர்மவினைகள் கரைந்து பாவங்கள் தோஷங்கள் நிவர்த்தி ஆகி, உங்களுடைய குடும்பத்தில் தொடர்ந்து வரும் கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

sombu

தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் தலைமுறைக்கு பிரச்சனை முடியவில்லை என்றாலும், இந்த பரிகாரம் செய்வதை நிறுத்த கூடாது. தினம்தோறும் சமையல் அறையில் சமையல் மேடைக்கு வலது பக்கத்தில் ஒரு சொம்பு தண்ணீரை வைத்து வர வேண்டும். இதனால்  உங்களை பின்தொடரும் கஷ்டம் உங்களோடு முடிந்து உங்களுக்கு அடுத்து வரக்கூடிய சந்ததியினர் கஷ்டம் இல்லாமல் வாழ்வதற்கு நிறையவே வாய்ப்பு உள்ளது.

kitchen

இரவு வைத்த இந்த தண்ணீரை, மறுநாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு ஊற்றலாம். அப்படி ஊற்ற இடமில்லை என்றாலும், ஷிங்கில் ஊற்றிக் கொள்ளலாம். தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
- Advertisement -