இந்த நிலை வாசல் பரிகாரத்தை முறையாக செய்துவிட்டால் நீங்கள் விரைவில் சொந்த வீடு வாங்குவது உறுதி

nilai-vasal
- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவருக்கும் லட்சியம், கனவு என்ற ஒன்று இருக்கும். அதில் பல பேரையும் கேள்வி கேட்டோம் என்றால் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் வீடு வாங்க வேண்டும் என்பது தான் அவர்களது லட்சியமாக இருக்கும். அவ்வாறு சொந்த நிலம் வாங்கி, வீடு கட்டி, அதில் தானும் தனது குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்க்கை இலட்சியமாக இருக்கிறது. ஏன் என்றால் இன்றைய காலகட்டத்தில் ஒரு வாடகை வீட்டில் இருப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்று அனைவரும் அறிந்ததே. அவ்வாறு சிறு வயதிலிருந்தே பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவர்களுக்கு வீடு ஒன்று தான் பெரும் சொத்தாக தெரியும். எனவே அதனை அடைய வேண்டி பல போராட்டங்களை சந்தித்து வருவார்கள். இப்படி உழைப்பை நம்பி இருப்பவர்களுக்கு இறைவனும் அருள் புரிய வேண்டும். அவ்வாறு தெய்வத்தின் அருளைப் பெறுவதற்கு இந்த நிலைவாசல் பரிகாரத்தை தவறாமல் செய்திடுங்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

இப்பொழுது ஒரு வாடகை வீட்டிற்கு செல்வதாக இருந்தால் குறைந்தது 7000 முதல் 10000 வரை வாடகை கொடுக்க வேண்டும். இவ்வளவு தொகையை வாடகையாக கொடுத்தும் வசதியாக இருக்க முடியாது. அதில் சிறிய அறை மட்டுமே இருக்கும். அதிலும் வாடகை வீடு என்கின்ற பொழுது தண்ணீர், மின்வசதி இவற்றிற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கும்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் உறவினர்கள் எவரேனும் நமது வீட்டிற்கு வந்து தங்குவதாக இருந்தால் வீட்டு உரிமையாளரிடம் உத்தரவு வாங்க வேண்டும். இவ்வாறு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. தனது இயல்பான வாழ்க்கையை மனிதன் இவ்வாறு வாடகை வீட்டில் வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம் தான்.

இப்படி தனது கனவுக்குள் தீவிரமாக இருக்கும் ஒருவர் இறைவனின் அருளைப் பெறுவதற்கு கோவிலுக்குச் சென்று நிலைவாசல் பூஜை செய்ய வேண்டும். அதாவது எந்த கோவிலில் இந்த பரிகாரத்தை செய்ய முடியுமோ அந்த கோவிலை தேர்வு செய்து கொள்ளலாம். விநாயகர் கோவில், முருகன் கோவில், அம்மன் கோவில் இவற்றில் எந்த தெய்வங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று அங்கு நுழைவாயிலில் இருக்கும் நிலை வாசற் படியின் இரண்டு புறங்களிலும் தண்ணீர் வைத்து துடைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த இரண்டு பக்கங்களிலும் மஞ்சள் பூசி விடவேண்டும். பிறகு குங்குமப் பொட்டு வைத்து, வாசற்படியின் இரு ஓரங்களிலும் மலர்களைத் தூவி தொட்டு வணங்க வேண்டும்.

இவ்வாறு செய்து கண்களை மூடி மனதிற்குள் உங்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து, விரைவாக நான் சொந்த மனை வாங்கி எனது வீட்டின் வாசலில் இப்படி மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இந்த பரிகாரத்தை கோவிலுக்கு செல்லும் பொழுதெல்லாம் உங்களால் முடிந்தவரை செய்து கொண்டே வரலாம். அது மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் இருக்கும் வீட்டின் வாசற்படியில் இவ்வாறு பூஜை செய்துவர விரைவில் நீங்கள் சொந்த வீட்டில் அமர்வது உறுதியாகும்.

- Advertisement -