கையில் காசு இல்லை என்றாலும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளதா? அப்போது ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்று விட்டு வாருங்கள். சொந்த வீடு கட்டும் யோகம் தானாக உங்களைத் தேடி வரும்

home
- Advertisement -

ஆசை என்பது அனைவருக்கும் இருக்கின்ற ஒரு பொதுவான விஷயமாகும். ஆசை இல்லாத மனிதன் என்று எவருமில்லை. அவ்வாறு ஒரு மனிதனுக்கு அடிப்படையான, அத்தியாவசியமான ஆசை என்ற ஒன்று எப்போதும் இருக்கும். அதாவது தனக்கென ஒரு சொந்தமான வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை தான் அது. ஆனால் நினைத்த உடனே சொந்த வீடு வாங்குவது என்பது இயலாத காரியமாகும். அதற்கென பல லட்சக்கணக்கில் நாம் செலவு செய்யவேண்டியிருக்கும். எவ்வளவுதான் யோசித்தால் இதற்கான வழி என்ன என்று நமக்குத் தெரியாது. அவ்வாறு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் இந்த கோவிலுக்குச் சென்று வந்தால் உங்கள் ஆசை விரைவில் நிறைவேறுவதற்கான யோகம் உங்களை வந்தடையும். வாருங்கள் இந்த அற்புத கோவிலை பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

house

சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் ஒரு முறை சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று வருவதென்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். சென்னைக்கு மிக அருகில் இருக்கும் சிறுவாபுரி முருகனை தரிசித்து தனக்கான வேண்டுதலை வேண்டிக் கொள்பவர்களுக்கு இது வரை அவர்கள் வேண்டிய அனைத்துமே கிடைத்திருக்கிறது.

- Advertisement -

அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி முருகனை வழிபட்ட திருத்தலம் என்ற மிகப் பெரிய சிறப்பு இந்த சிறுவாபுரி கோவிலுக்கு இருக்கிறது இந்த கோவிலுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பவர்கள் மட்டுமல்லாமல் திருமணத்தடை உள்ளவர்கள் குழந்தை வரம் இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே இந்த கோவிலுக்கு வந்து தங்களின் வேண்டுதலை இறைவனின் பாதங்களில் வைக்கின்றனர் தொடர்ந்து ஆறு வாரங்கள் இறைவனை தவறாமல் சந்தித்து வரும திருத்தலம் என்ற மிகப் பெரிய சிறப்பு இந்த சிறுவாபுரி கோவிலுக்கு இருக்கிறது இந்த கோவிலுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பவர்கள் மட்டுமல்லாமல் திருமணத்தடை உள்ளவர்கள் குழந்தை வரம் இல்லாதவர்கள் வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவருமே இந்த கோவிலுக்கு வந்து தங்களின் வேண்டுதலை இறைவனின் பாதங்களில் வைக்கின்றனர்.

marriage
Marriage matching

தொடர்ந்து ஆறு வாரங்கள் இறைவனை தவறாமல் சந்தித்து நமது மனதில் உள்ள வேண்டுதலை இறைவனிடம் சொல்லி விட்டோம் என்றால் போதும் கூடிய விரைவில் உங்கள் வேண்டுதலுக்காக பலன் கிடைத்துவிடும்.

- Advertisement -

அவ்வாறு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் கோவிலின் பின்புறம் உள்ள அரசமரத்தடியில் சிறிய செங்கல் கற்களை எடுத்து உங்களுக்கு ஏற்ற வகையில் வீடுகள் போல அதனை வடிவமைக்க வேண்டும். அப்பொழுது உங்கள் மனதில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இதனை செய்தால் மேலும் சிறப்பு வாய்ந்த பலன் உங்களுக்கு மிக விரைவில் கிடைத்துவிடும்.

built-home

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்:
அண்டர்பதி குடியேற
மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீர வருளாலே
அந்தரியொ டுடனாடு
சங்கரனு மகிழ்கூர
ஐயங்கரனு முமையாளு
மகிழ்வாக மண்டலமு
முனிவோரு மெண்டிசையி லுளபேறு
மஞ்சினனு மயனாரு
மெதிர்கான மங்கையுட னரிதானு
மின்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள
அண்டர்மகள் மணவாளா
புந்திநிரை யறிவாளா வியர்தோளா
போங்குகட லுடனாகம்
விண்டுரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப
செம்பொனெழில் செரிரூப
தன்டமிழன் மிகுனேய முருகேசா
சந்ததமு மடியார்கள்
சிந்தையது குடியான
தன்சிறுவை தனில்மேவு பெருமானே….

murugan

என்ற திருப்புகழைப் பாடி சிறுவாபுரி முருகனை வேண்டிக் கொள்ள உங்கள் மனதில் இருக்கும் ஆசை விரைவில் நிறைவேறும் பலன் கிடைக்கும்.

- Advertisement -