வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறோம் ஒரு சொந்த வீடு கூட கட்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கியமான கோவில் என்ன? இங்கு சென்று வந்தால் சொந்த வீடு உடனே கட்டி குடியேறலாமாம் தெரியுமா?

temple-sontha-veedu
- Advertisement -

ஒருவருடைய வாழ்நாளின் மிகப்பெரிய கனவாக இருப்பது வேறு எதுவுமே கிடையாது சொந்த வீடு கட்டும் எண்ணமாக தான் இருக்கக்கூடும். தனக்கென ஒரு வீடு இருந்தால் கூழோ, கஞ்சியோ நிம்மதியாக குடித்துவிட்டு இருக்கலாம் என்று பலரும் மனதில் அங்கலாய்ப்பது உண்டு. எவ்வளவோ கஷ்டப்பட்டு உழைத்துக் கொண்டிருந்தாலும் நம்மால் நமக்கென ஒரு சொந்த வீடு கட்ட முடியவில்லை என்று நினைப்பவர்கள் அனைவரும் செல்ல வேண்டிய கோவில் என்ன? அங்கு சென்று வந்தால் உடனே வீடு கட்ட முடியுமா? என்கிற சந்தேகத்திற்கு தீர்வு தருகிறது இந்த ஆன்மீகம் பதிவு!

ஆன்மீகத்தில் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு கோவில் தீர்வு தருவதாக நம்பப்படுகிறது. அந்த வகையில் சொந்த வீடு கட்டும் எண்ணம் உள்ளவர்கள் செல்ல வேண்டிய கோவில்கள் ஏராளம் உண்டு! குறிப்பாக செவ்வாயில் முருகனை வழிபடுபவர்களுக்கு விரைவாகவே சொந்த வீடு கட்டும் யோகம் வரும் என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. முருகன் கோவிலுக்கு சென்று அங்குள்ள முலவரை தரிசித்து வழிபட்டு வேண்டிக் கொண்டால் சொந்த வீடு கட்டக் கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்கும் வரும்.

- Advertisement -

அதுபோலவே வாஸ்து கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவில் சொந்த வீடு கட்டும் யோகத்தை அள்ளிக் கொடுப்பதாக கருதப்படுகிறது. நாகை மாவட்டத்தில் இருக்கக்கூடிய நன்னிலம் என்கிற ஊருக்கு அருகாமையில் அமைந்துள்ள திருக்கோவில் திருப்புகலூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் அக்னீஸ்வர ஸ்வாமி திருக்கோயில் என்ற அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வாஸ்து சார்ந்த பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வு தருவதாக கூறப்படுகிறது.

அக்னிஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பொழுது செங்கல் ஒன்றை புதிதாக நீங்கள் உங்களுடைய உழைப்பில் சம்பாதித்த காசை கொண்டு வாங்கி கொள்ள வேண்டும். அங்கு சென்று செங்கல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டு பின்னர் அந்த செங்கல்லை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அக்னிஸ்வரர் திருக்கோவிலில் செங்கல் வைத்து வழிபடுபவர்களுக்கு எத்தகைய வாஸ்து தோஷங்கள், ஜோதிட ரீதியான தடைகள் இருந்தாலும் அதை தகர்த்து எறிந்து உங்களுக்கான வருமானத்தையும், வீடு கட்டும் யோகத்தையும் பெற்று தருவதாக நம்பப்படுகிறது.

- Advertisement -

சிலருக்கு ஜோதிட ரீதியான தடைகள் இருந்து கொண்டே இருக்கும். எல்லா விதமான வசதி இருந்தும் வீடு கட்ட முடியாத நிலை இருக்கும். சிலருக்கு மனை இருக்கும் ஆனால் அதில் வீடு கட்டுவதற்கான போதிய பணம் சேராமல் அதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்தாலும், அது வேறு விதத்தில் செலவாகி விடும்.

இதையும் படிக்கலாமே:
மாமியார் மருமகளுக்குள் அடிக்கடி சண்டை வருகிறதா? கவலையை விடுங்க உங்க ஹாலில் இதை செஞ்சு பாருங்க இனி ஒற்றுமையாக இருப்பீங்க!

இப்படி சொந்த வீடுக்கு கட்டும் பணியில் தடைகள் தொடர்ந்து இருந்தால், நீங்கள் இந்த கோவிலுக்கு சென்று செங்கல் வைத்து வழிபட்டால் நிச்சயம் இந்த தடைகள் அனைத்தும் விலகும். எப்படியாவது உங்களுக்கென ஒரு வீடு கட்டக்கூடிய அதிர்ஷ்டம் வர நீங்கள் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு சென்று வரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருக்கோவில் வீடு கட்டும் யோகம் மட்டும் அல்லாமல் வாஸ்து ரீதியான அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு தருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -