இந்த தீபத்தை முருகனுக்கு ஏற்றி வழிபட்டால் சொந்த வீடு யோகம் கிடைக்கும்.

murugan valipadu
- Advertisement -

நல்ல படிப்பு, நிலையான வேலை, அன்பான குடும்பம் இவை அனைத்தையும் தாண்டி சொந்தமாக இருப்பதற்கு ஒரு சிறிய வீடாவது இருக்க வேண்டும் என்று தான் நடுத்தர மக்கள் ஆசைப்படுவார்கள். அந்த நடுத்தர மக்களின் கனவு இல்லத்தை நினைவாக்குவதற்கு முருகப்பெருமானின் அருள் கண்டிப்பாக தேவை. அப்படி முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கும் சொந்த வீடு கனவை நினைவாக்குவதற்கும் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பூமி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் ஆதிக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு பூமி யோகம் என்பது உண்டாகும். அவரை சாதகமான சூழ்நிலையில் மாற்றுவதற்கு அவருக்குரிய தெய்வமான முருகப்பெருமானின் அருள் வேண்டும். முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு முருகப்பெருமானிற்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த முறையை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் முருகனின் திருவுருவப்படத்தை அல்லது அவருடைய சிலையை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட வேண்டும்.

பிறகு அவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்ற வேண்டும். அடுத்ததாக அவருக்கு நெய்வேத்தியமாக செவ்வாழை பழத்தை வைக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல் இயன்றவர்கள் பாசிப்பருப்பு பாயாசத்தையும் நெய்வேத்தியமாக வைக்கலாம். அடுத்ததாக அவருக்கு முன்பாக நட்சத்திர கோலத்தை போட வேண்டும். அந்த நட்சத்திரத்தில் சரவணபவ எனும் ஆறு எழுத்தை எழுத வேண்டும். பிறகு அந்த ஆறு எழுத்திற்கு மேலே ஆறு வெற்றிலைகளை வைக்க வேண்டும்.

- Advertisement -

அந்த வெற்றிலைகளுக்கு மேலே புதிதாக வாங்கிய 6 அகல்விளக்குகளை வைத்து நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு முருகப்பெருமானை நினைத்து ஸ்கந்த குரு கவசத்தை மனதார நிறுத்தி நிதானமாக படிக்க வேண்டும். அடுத்ததாக ஒரு நோட்டை எடுத்து அந்த நோட்டில் சிவப்பு நிற மையைப் பயன்படுத்தி ஓம் சரவணபவ என்று ஆறு முறை எழுத வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து 21 செவ்வாய்க்கிழமைகளில் இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் மேற்கொண்டு வந்தால் முருகப்பெருமானின் அருளால் செவ்வாய் கிரகம் நமக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவார். அதனால் நம்முடைய வீடு, மனை வாங்கும் கனவு நிறைவேறும். பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அந்த நாட்களை தவிர்த்து விட்டு, மற்ற வாரங்களில் தீபம் ஏற்றி வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை நீங்க ஆஞ்சநேயருக்கு இப்படி ஒரு முறை வெற்றிலை மாலை சாற்றுங்கள்.

இந்த வழிபாட்டை யார் ஒருவர் முழு நம்பிக்கையுடன் செய்கிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பான முறையில் முருகப் பெருமானின் அருளால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என்பது உறுதி.

- Advertisement -