காரிய தடை நீங்க ஆஞ்சநேயருக்கு இப்படி ஒரு முறை வெற்றிலை மாலை சாற்றுங்கள்.

vetrilai maalai
- Advertisement -

அவதார புருஷனாக திகழக்கூடிய ராமபிரானின் தீவிரமான பக்தராக இருக்கக்கூடியவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயரை நாம் முறையாக வழிபட்டால் நாம் என்ன வேண்டுதல் செய்கிறோமோ அந்த வேண்டுதலை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். மேலும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அவரை அழைக்கும் பொழுது அந்த இடத்திற்கு ஓடோடி வந்து நம்மை காப்பாற்றுவதில் முதலிடம் பிடிப்பவரும் ஆஞ்சநேயர் தான். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை எப்படி சாற்றினால் காரிய வெற்றி ஏற்படும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நாம் தெய்வ வழிபாடு மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக முறையில் வெற்றிலை பாக்கு வைத்து வழிபடுவோம். வெற்றிலை மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது என்பதை நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வெற்றிலையை வைத்து நாம் ஆஞ்சநேயருக்கு மாலைகள் அணிவிப்பதும் உண்டு. அப்படி அணிவிக்கும் வெற்றிலை மாலையில் என்ன மாற்றத்தை செய்தால் நம்முடைய காரியங்கள் வெற்றி அடையும் என்று பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக ஆஞ்சநேயரை நாம் வழிபட்டோம் என்றால் நமக்கு தைரியமும், வீரமும் கிடைக்கும் என்றும் சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளில் இருந்து நம்மை அவர் காப்பாற்றுவார் என்றும் நம் அனைவருக்கும் தெரியும். மனிதனுடைய ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு வகையான தீர்வு உண்டு. அந்த தீர்வை தருவதற்கு ஒவ்வொரு தெய்வமும் தயாராக தான் இருக்கிறது. அந்த தெய்வத்தை நம்முடைய பிரச்சனைக்கேற்றவாறு வழிபட வேண்டும் அதுதான் குறிப்பிடத்தக்கது.

காரிய வெற்றியை ஏற்படுத்தும் வெற்றிலை மாலை:

பொதுவாக ஆஞ்சநேயருக்கு நாம் வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை போன்ற மாலைகளை அணிவிப்போம். ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. அந்த வகையில் வெற்றிலை மாலையை நாம் அணிவிப்பதன் மூலம் நமக்கு வெற்றிகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதிலும் ஒவ்வொரு வெற்றிலைக்கு நடுவிலும் நாம் வெட்டிவேரை வைத்து மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நாம் நினைத்த காரியத்தில் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். மேலும் அந்த காரியத்தில் நமக்கு வெற்றிகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு மாலையை கொடுத்துவிட்டு 11 முறை ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும். அவரை வலம் வரும் ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது. 3 முறை வலம் வந்தால் அதிர்ஷ்டம் பெருகும். 9 முறை வலம் வந்தால் நவக்கிரகங்களால் ஏற்பட்டிருக்கும் துன்பங்கள் நீங்கும். அதேபோல் 11 முறை வலம் வந்தால் நாம் நினைத்த காரியத்தில் நமக்கு வெற்றிகள் கிடைக்கும்.

- Advertisement -

வாரத்தில் வரக்கூடிய வியாழன் மற்றும் சனிக்கிழமையில் இவ்வாறு நாம் மாலை அணிவித்து வலம் வர வேண்டும். இயலாதவர்கள் மாதத்தில் ஒருமுறை வரக்கூடிய மூல நட்சத்திரத்தன்று வழிபடலாம். அல்லது தங்களுடைய பிறந்த நட்சத்திர நாளன்று வழிபடலாம். இந்த நாட்களில் எந்த நாள் உங்களுக்கு வசதியான நாளோ அந்த நாளை தேர்வு செய்து ஆஞ்சநேயரை வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் ஒரு முறை இந்த விருட்ச பரிகாரத்தை செய்தால் போதும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வருவது உறுதி.

கடையிலிருந்து வெற்றிலை மாலையை வாங்கி தருவதற்கு பதிலாக நாமே நம் கைகளால் நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை மனதார நினைத்துக் கொண்டு ராம நாமம் கூறியவாரே மாலையை தொடுத்து ஆஞ்சநேயருக்கு சமர்ப்பிப்பதன் மூலம் நம்முடைய காரியங்கள் விரைவில் வெற்றி அடையும்.

- Advertisement -