சொந்த வீடு அமைய தானம்

thanam
- Advertisement -

பல பேரின் வாழ்க்கை லட்சியமாக இருக்கக்கூடியது தான் சொந்த வீடு கட்டுதல். சொந்த வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி அல்லது வாங்குவதாக இருந்தாலும் சரி அதற்கு நவகிரகங்களின் அருள் கண்டிப்பான முறையில் தேவை. அதிலும் குறிப்பாக செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் சொந்த வீடு கட்டும் அல்லது வாங்கும் யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சொந்த வீடு வாங்கவும் அதேசமயம் சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து வெளிவரவும் செய்யக்கூடிய தானத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

என்னதான் செவ்வாய் கிரகத்தின் அருள் இருந்தாலும் அந்த ஜாதகத்தில் சனிபகவானின் ஆதிக்கம் இருந்தால் அவர்களால் சொந்தமாக எதையுமே வாங்க முடியாது என்று தான் கூற வேண்டும். மேலும் சனி பகவானின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடிய ராசிகள் இந்த தானத்தை செய்வதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு சனி திசை நடக்கும் நபர்களும் இந்த தானத்தை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

இந்த தானத்தை செவ்வாய் கிழமை அல்லது சனிக்கிழமையில் மேற்கொள்ள வேண்டும். செவ்வாய்க்கிழமையாக இருந்தால் சூரிய அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக செய்ய வேண்டும். சனிக்கிழமையாக இருந்தால் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு செய்ய வேண்டும். இந்த தானத்தை தொடர்ந்து ஐந்து மாதங்கள் செய்ய வேண்டும். மாதத்தில் ஏதாவது ஒரு செவ்வாய் அல்லது சனிக்கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

அந்த நாளிலிருந்து அதாவது செவ்வாய்க்கிழமை கொடுப்பதாக இருந்தால் செவ்வாய்க்கிழமை கொடுத்த நாளிலிருந்து 30 நாட்கள் கழித்து வரும் செவ்வாய்க்கிழமை மறுபடியும் தானம் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து ஐந்து மாதங்கள் தானம் தர வேண்டும். முதல் மாதம் தானம் செய்யும் பொழுது அந்த பொருளை நேரடியாக வீட்டிற்கு வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விநாயகப் பெருமானிடம் தொடர்ந்து 5 மாதம் எந்தவித தடைகளும் இன்றி இந்த தானத்தை நான் வழங்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்த பிறகு, குலதெய்வ மற்றும் இஷ்ட தெய்வத்தின் வழிபாடை மேற்கொண்டு தூப தீப ஆராதனை காட்டிய பிறகு இந்த பொருளை தானமாக தர வேண்டும்.

- Advertisement -

அந்த பொருள்தான் கருப்பு குடை. இந்தக் குடையை வாங்கி வந்து தானமாக தரும்பொழுது கண்டிப்பான முறையில் காலில் செருப்பு அணிந்திருக்கக் கூடாது. வெறும் காலில் நின்று மிகவும் பவ்யமாக இரண்டு கைகளால் வறுமை நிலையில் இருப்பவர்களுக்கு தானம் தர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து மாதங்கள் தருவதன் மூலம் சொந்த வீடு வாங்கும் யோகம் மற்றும் கட்டும் யோகம் ஏற்படும்.

மேலும் இந்த குடையை தருவதோடு மட்டுமல்லாமல் புதிதாக செருப்பு வாங்கி தரலாம். அதோடு குடிப்பதற்கு டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். இப்படி இந்த மூன்று தானத்தையும் ஒருவர் மேற்கொண்டால் அவரின் வாழ்க்கையில் சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பண விரயத்தை குறைக்கும் குறிப்புகள்

இந்த எளிமையான தானத்தை நம்பிக்கையுடன் செய்து சொந்த வீடு அமையப்பெற்று சனிபகவானின் பாதிப்பிலிருந்து விடுபடுவோம்.

- Advertisement -