வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி போக பரிகாரம்

amman4
- Advertisement -

எவ்வளவுதான் காசு கொடுத்து ஆடம்பரமாக வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தாலும், சொந்த வீட்டில் வாழக்கூடிய நிம்மதி ஒரு மனுஷனுக்கு எந்த இடத்திலும் கிடைக்காது. உங்களுக்கும் சீக்கிரம் சொந்த வீடு கட்டி அதில் குடி போக வேண்டும் என்று ஆசை இருக்குதா. ஆனால் அதற்கான வாய்ப்புகளே இல்லை என்ற சூழ்நிலையும் உள்ளதா.

உங்களுக்கான எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான் இது. மாதம் வெறும் இருபதாயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் கூட, சொந்த வீட்டுக்கு குடி பெயருவதற்கு உண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இது.

- Advertisement -

சொந்த வீடு வாங்க பரிகாரம்

குறிப்பாக சென்னையில் இருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் ரொம்ப ரொம்ப பயனுள்ளபடி அமையும். சென்னையில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலுக்கு சென்று வந்தால் சொந்த வீடு கட்டும் கனவு நினைவாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஐந்து வாரம் வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரையில் விளக்கு போட்டு இந்த கோவிலில் இருக்கும் அம்பாலை தரிசனம் செய்து, வேண்டுதல் வையுங்கள்.

உங்களால் முடிந்தால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வைத்து, வேண்டுதல் வச்சு பாருங்க. உங்க சொந்த வீடு கட்டும் கனவு சீக்கிரம் நினைவாகும். 5 வாரம் வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். சொந்த வீடு கட்டுவதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைத்துவிட்டது 20,000 சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த எனக்கு, 50,000 ரூபாயில் வேலை கிடைத்துவிட்டது.

- Advertisement -

லோன் போட்டு ஒரு வீடு வாங்குவதற்கான வாய்ப்பு வந்துவிட்டது என்றால், அந்த அம்பாளுக்கு உடனடியாக ஒரு பட்டுப் புடவை எடுத்து சாத்தி வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள். இந்த வழிபாடு உங்களுக்கும் நிச்சயமாக சொந்த வீடை வாங்கி கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது பிரபல ஜோதிடர் ஒருவரால் சமீப காலத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு பரிகாரம்தான்.

சென்னையில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பரிகாரத்தை நீங்கள் பின்பற்றி பலன் பெறலாம். வெளியூரில் இருப்பவர்கள் என்ன செய்வது? வீட்டில் இருந்தபடியே இந்த திருவொற்றியூர் வடிவுடைய அம்மனின் திருவுருவப்படத்தை வைத்து வெள்ளிக்கிழமை, சுக்கிர ஹோரை நேரத்தில் விளக்கு போட்டு வழிபாடு செய்யலாம். முடிந்தவரை ஒரு முறையாவது வெள்ளிக்கிழமை, சென்னையில் இருக்கும் இந்த அம்பாளை தரிசனம் செய்ய முயற்சி செய்யுங்கள்.

- Advertisement -

அந்த மண்ணை மிதிக்கும் போது தான் உங்களுக்கு பரிகாரம் முழுசாக வேலை செய்யும். மிக மிக பிரபல்யமான கோவில் இது. அந்த திருவொற்றியூர் மண்ணில் காலை வைத்து அம்பாளை பார்க்க செல்வதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலே உங்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வந்துவிட்டது என்று தான் அர்த்தம்.

வீடு கட்ட வேண்டும் என்றால் செவ்வாய் பகவான், முருக பெருமான் வழிபாடு இதெல்லாம் நமக்குத் தெரிந்தது. இதையும் தாண்டி சொல்லப்பட்டுள்ள ஒரு எளிமையான ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான் இது. முயற்சி செய்துதான் பார்ப்போமே நல்ல காலத்தை அம்பாள் நமக்கு இந்த பதிவின் மூலம் கூட காட்டி இருக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பல நாள் பண கஷ்டத்தை தீர்க்கும் பால் பரிகாரம்

இந்த பிரபஞ்சம் சொல்லக்கூடிய நல்ல தகவல்கள் நமக்கு எந்த ரூபத்தில் வந்தாலும் சரி, அது நமக்கானது என்று நினைத்து நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -