பெண்களே, காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் இந்த ஒரு பொருளை வையுங்க. சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.

sontha-veedu
- Advertisement -

சொந்த வீடு கட்டக்கூடிய கனவு உங்களுக்கு நிறைவேற வேண்டுமா. சொந்த வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் வீட்டில் இருக்கும் பெண்கள் தினமும் இந்த பூஜையை செய்து வர வேண்டும். இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு, தினமும் மனம் உருகி சொந்த வீடு வேண்டுமென்று வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் இறைவனின் செவிகளில் சீக்கிரம் விழும். உங்களுடைய வீடு கட்டும் கனவு சீக்கிரம் நினைவாகும். சொந்த வீடு கட்ட ஆசை இருப்பவர்கள் எல்லாம் இந்த ஆன்மீகம் பதிவை தொடர்ந்து படித்து பலன் பெறலாம்.

சொந்த வீடு கட்ட பெண்கள் செய்ய வேண்டிய பரிகார பூஜை:
ஒரு பித்தளை தாம்பூல தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பச்சரிசியை பரப்பி வையுங்கள். அதன் மேலே ஒரு ரூபாய் நாணயத்தை குலதெய்வத்தை வேண்டி வச்சிருங்க. அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வையுங்க. இதன் மேலே காமாட்சி அம்மன் விளக்கு அல்லது கெஜலட்சுமி விளக்கை வைத்து விட்டு, அதில் எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற போறீங்க. அவ்வளவுதான். இந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து சிறிது நேரம் சொந்த வீடு வேண்டும் என்று உங்கள் குலதெய்வத்தையும் அந்த முருகப்பெருமானையும் மனமுருகி வேண்ட வேண்டும். (காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயமும் பச்சரிசியும் இருக்கப் போகிறது.)

- Advertisement -

நீங்கள் தயார் செய்து வைத்த விளக்கு அப்படியே இருக்கும். தினமும் இந்த விளக்கை ஏற்றி வேண்டுதலை மட்டும் வைத்தால் போதும். வாரத்தில் ஒரு நாள் மட்டும் அந்த விளக்கை எடுத்து சுத்தம் செய்வீங்க. பச்சரிசி நிறம் மாறாமல் இருக்கும் பட்சத்தில் அதை அப்படியே மீண்டும் வைக்கலாம். பச்சரிசி நிறம் மாறியவுடன் மாதத்திற்கு ஒருமுறை பழைய பச்சரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இரையாக போடுங்க. அல்லது அந்த பச்சரிசியை அரைத்து கொஞ்சம் வெல்லம் சேர்த்து கோவிலுக்கு செல்லும்போது மரத்தடியில் இருக்கும் எரும்பு புத்தில் போட்டால் இன்னும் புண்ணியம்.

ஒரு ரூபாய் நாணயத்தை நீங்கள் சொந்த வீடு கட்டும் வரை மாற்றவே கூடாது. இதே வேண்டுதலை தினமும் தொடர்ந்து அந்த தீபச்சுடர் முன்பாக இந்த பிரபஞ்சத்திடம் உங்கள் தெய்வத்திடம் வைக்கும் போது உங்களுடைய சொந்த வீடு கட்டும் ஆசை நிச்சயம் நிறைவேறும். சரி, விளக்கு ஏற்ற தொடங்கியாச்சு. ஒரு சில நாட்களில் வீடு கட்டக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குது. இடையே இந்த வழிபாட்டை நிறுத்தி விடலாமா. கூடவே கூடாது.

- Advertisement -

வீடு கட்டத் தொடங்கி, வாசல் கால் வைக்கும் நேரம் உங்களுக்கு வரும் அல்லவா. அந்த வாசல் கால் வைக்கும் போது அந்த வாசல் கதவை வைக்கும் போது, நிலைவாசல் கதவுக்கு அடியில் சில மங்களகரமான பொருட்களை எல்லாம் போடுவாங்க. அதில் நீங்கள் பூஜையறையில் வைத்திருக்கும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தையும் கொண்டு போய் போட்டுருங்க.

இதையும் படிக்கலாமே: எந்த பூஜையும் வழிபாடும் செய்யாமல் ஐந்து கரு மிளகு இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களை சுற்றி இருக்கும் தீய சக்திகள் கெட்ட சக்திகள் கண் திருஷ்டி அனைத்தும் நீங்கி வருமானம் பல மடங்கு உயரும்.

அவ்வளவுதாங்க, உங்களுடைய பூஜை நிறைவடைந்தது. எளிமையான இந்த பரிகாரத்தை செய்து சொந்த வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -