எந்த பூஜையும் வழிபாடும் செய்யாமல் ஐந்து கரு மிளகு இருந்தால் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களை சுற்றி இருக்கும் தீய சக்திகள் கெட்ட சக்திகள் கண் திருஷ்டி அனைத்தும் நீங்கி வருமானம் பல மடங்கு உயரும்.

- Advertisement -

இன்றைய காலக்கட்டமே மிகவும் மோசமான சூழ்நிலையில் தான் உள்ளது. சக மனிதன் வாழ்வதை பார்த்து பொறாமைப்படும் மனிதர்களை தான் பார்க்க முடிகிறது. ஒருவர் நல்ல முறையில் வாழ்வதை பார்த்து சந்தோஷப்படும் மனங்கள் குறுகிப் போய் விட்டது. இது போன்ற மோசமான சூழ்நிலையில் நம்மை எந்த கெட்ட எண்ணங்களும் தாக்காமல் இருக்க ஏதாவது செய்து கொள்ள வேண்டும். அப்படியான ஒரு எளிமையான பரிகாரம் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கண் திருஷ்டி தீய சக்திகள் அழிய பரிகாரம்
இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை அதுவும் வளர்பிறை அஷ்டமியான இந்த நாளில் செய்வது அதிகமான பலனை கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதே போல் இந்த பரிகாரத்தை இன்று இரவு 7 மணிக்கு மேல் தான் செய்ய வேண்டும். அப்போது தான் இந்த பரிகாரமும் பலன் அளிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படும் பொருள்கள் இரண்டே இரண்டு தான். ஒரு கைப்பிடி உப்பு, ஐந்து கரு மிளகு இந்த இரண்டும் இருந்தாலே போதும். இந்த பரிகாரத்தை எளிமையாக செய்து விடலாம். இந்த பரிகாரத்தை செய்ய இரவு 7 மணிக்கு மேல் உங்கள் உள்ளங்கையில் கைப்பிடி உப்பும், ஐந்து கருமிளகையும் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலையை சுற்றி முதலில் மூன்று சுற்று வலது புறமாக சுற்றிக் கொள்ளுங்கள். அதே போல் வீட்டின் உள்ளே வரவேற்பறையில் நிற்க வைத்து உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் இது போல சுற்றி விடுங்கள். இப்படி சுற்றும் போதே உங்களுக்கு இருக்கும் கண் திருஷ்டி, கெட்ட சக்திகள், கடன் அனைத்தும் நீங்கி வருமானம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு வீட்டையும் இதே போல் மூன்று முறை சுற்றிய பிறகு இந்த உப்பையும், மிளகையும் ஒரு தேங்காய் சிரட்டையில் போட்டு எரித்து விடுங்கள். இதை எரிக்கும் பொழுது தேங்காய் சிரட்டையில் இருந்து படபடவென்று வெடிக்கும் சத்தம் வரும். இது நம்மை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் கண் திருஷ்டி போன்றவற்றையெல்லாம் அடியோடு அழிக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்தக் கண் திருஷ்டியை அழிக்க செய்யப்படும் இந்த பரிகாரமானது நம் முன்னோர்கள் முதல் கடைபிடித்து வந்த ஒரு எளிமையான வழி தான். இத்துடன் கருமிளகையும் சேர்த்து செய்யும் போது நம் ஏதேனும் கெட்ட சக்திகளின் தாக்கம் இருந்தால் அதுவும் அழிந்து விடக் கூடிய வாய்ப்பு அதிகம். நம்மை சுற்றியுள்ள கெட்ட சக்திகளும் கண் திருஷ்டியும் நீங்கி விட்டாலே நம்முடைய எண்ணமும் செயலும் தெளிவாகி விடும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதன் மூலம் நாம் நல்ல முறையில் உழைத்து அதிக அளவு வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.

இந்த பரிகாரத்தை வார வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு எப்போதுமே இது போன்று கெட்ட சக்திகளில் தாக்குதல்கள் எதுவும் நெருங்கவே முடியாது. அதே நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்யும் நாள் அன்று வராகி அன்னையின் ஆலயம் அங்கு சென்று ஒரு தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏனெனில் கெட்ட சக்திகளையும், எதிரிகளையும் அழிக்கக் கூடிய தெய்வத்தில் அவருக்கு நிகர் யாரும் இல்லை.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு சிறு மாற்றத்தால் கிரகங்களினால் ஏற்படும் பெருந் துன்பத்தில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம் தெரியும்மா?

இந்த வழிபாட்டு முறையையும், சுற்றி போடும் பரிகாரத்தையும் தொடர்ந்து செய்து வரும் பொழுது உங்கள் வாழ்க்கையை தடையில்லாமல் நகர்த்தி சென்று நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -