சொந்த வீடு அமைய ஆல மர பரிகாரம்

veedu jathagam logo
- Advertisement -

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு உடை உறைவிடம் என்பது தான். இதில் உணவு உடைக்கு அடுத்து நமக்கு தேவையான ஒன்று எனில் அது உறைவிடம் தான். காக்கை குருவிகளுக்கு கூட தனக்கென சொந்தமாக ஒரு கூடு இருக்கும் போது மனிதனாக பிறந்தவர்கள் தங்களுக்கென வீடு வேண்டும் என நினைப்பதில் தவறு ஒன்றும் கிடையாது.

ஆனால் இந்த கனவு பலருக்கும் கனவாகவே போய் விடுகிறது. எத்தனை முயற்சி செய்தாலும் அவர்களால் சொந்தமாக ஒரு நிலத்தையோ, வீட்டையோ வாங்க முடியாமல் துன்பப்படுகிறார்கள். வசதி இல்லாதவர்கள் தான் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்றால் ஒரு சில இடங்களில் கையில் பணம் இருந்தும் அவர்களால் இதை செய்ய முடியாது.அப்படியானவர்களுக்கான ஒரு எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சொந்தமாக வீடு அமைய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு தேவையான முக்கியமான ஒன்று ஆலமரம். இந்த ஆலமரம் விழுதுகள் உள்ள ஆலமரமாக இருக்க வேண்டும். அது மிக மிக முக்கியம். அடுத்து ஒரு சிகப்பு நிற அரை ஞாண் கயிறு வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் நாளன்று செய்ய வேண்டும்.

கணவன் மனைவி இருவரில் யாருடைய ஜென்ம நட்சத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை. அன்றைய தினத்தில் இந்த பரிகாரத்தை தொடங்கலாம். இந்த பரிகாரத்தை செய்யப் போகும் முன் இந்த கயிறை மூன்று முடிச்சு போடுங்கள். இந்த முடிச்சு போடும் போது உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு வீடு அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குலதெய்வ கோவில் அருகில் இருந்தால் வாய்ப்புள்ளவர்கள் கோவிலுக்கு சென்ற பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். அப்படி போக முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையில் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இத்துடன் இஷ்ட தெய்வத்தை வணங்கிய பிறகு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இந்த முடிச்சு போட்ட கயிறையும் பன்னீரையும் எடுத்துக் கொண்டு ஆலமரம் இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். ஆலமரத்தின் விழுதில் இந்த பன்னீரை ஊற்றி நன்றாக தெளித்து விடுங்கள். அதன் பிறகு அந்த இடத்தில் நீங்கள் முடிச்சு போட்ட கயிறை கட்ட வேண்டும். இவையெல்லாம் செய்யும் பொழுது உங்களுக்கு சொந்தமாக வீடு அமைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய போகும் முன்பும் செய்த பிறகும் வேறு எங்கும் செல்லக் கூடாது. நேரடியாக வீட்டில் இருந்து சென்று ஆலயத்தில் இறைவனை வணங்கிய பிறகு பரிகார இடத்திற்கு சென்று மறுபடியும் நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். இந்த பரிகாரத்தினை ஒன்பது முறை செய்ய வேண்டும். அதாவது கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜென்ம நட்சத்திரத்தன்று தொடங்குங்கள்.

அடுத்து மற்றொருவரின் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் செய்யுங்கள். பிள்ளைகள் இருப்பின் அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் நாள் அன்று செய்யுங்கள். இந்த வீட்டில் வாழக் கூடியவர்களின் ஜென்ம நட்சத்திரத்தன்று இதை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இப்படியாக ஒன்பது முறை தொடர்ந்து செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர காமாட்சி விளக்கு வழிபாடு

இப்படி ஒன்பது முறை இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களுக்கு வீடு அமையும் யோகம் நிச்சயம் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து சொந்தமாக வீடு அமைந்து அதில் வாழக் கூடிய யோகத்தை பெறுங்கள்.

- Advertisement -