சொந்தமாக வீடு, நிலம், அமைய வேண்டுமா? இன்றே இந்த பொருள்களை உங்கள் பூஜை அறையில் வைத்தால் மட்டும் போதும். சொந்த வீடு அமைவதற்கான யோகம் உங்களை தேடி வரும்.

- Advertisement -

சொந்த வீடு வேண்டும் என்று பலர் நினைத்தாலும் எல்லோராலும் அதை செய்து கொள்ள முடியவில்லை காரணம் அதற்கான கிரக நிலைகள் அவர்களுக்கு சரியாக அமையாது தான். பணம் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கலாம் ஆனால் எத்தனையோ பேரிடம் பணம் இருந்தும் மற்றதை எல்லாம் வாங்குவார்கள். ஆனால் சொந்தமாக நிலம் வாங்கி அதில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் அது முடியவே முடியாது. இன்னும் சிலரும் நிலம் வாங்கி வைத்திருப்பார்கள் அதில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தாலும் கட்ட முடியாது. இன்னும் பலர் கட்டிய வீடு பாதையிலே நின்று விடும் முழுதாக கட்டி முடிக்க முடியாமல் திணறுவார்கள். இப்படி ஒரு வீடு நிலம் அமைவது என்பது நம் உழைப்பு அதிர்ஷ்டம் இதையெல்லாம் மீறி நம்முடைய கிரக நிலைகள் சரியாக இருந்தால் தான் இந்த கனவானது நிறைவேறும். அப்படி ஆன கிரக கோளாறுகளை சரி செய்ய ஒரு சிறிய பரிகாரத்தை செய்தால் போதும் அது என்ன என்று இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்தப் பரிகாரத்தை செய்ய நமக்கு தேவை கல் உப்பு, தேங்காய் இது இரண்டு மட்டும் தான். இதை எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் செவ்வாய்க்கிழமையில் தொடங்கினால் நல்லது. பொதுவாகவே வீடு நிலம் இவற்றையெல்லாம் நமக்கு வேண்டும் என நினைத்து வேண்டுவது முருகப்பெருமானே, அவருக்கான நான் இந்த செவ்வாய்க்கிழமை எனவே இந்த பரிகாரத்தையும் செவ்வாய்க்கிழமையும் தொடங்கினால் நல்லது.

- Advertisement -

சொந்தமாக நிலம், வீடு அமைய பரிகாரம்
இதை செய்ய ஒரு அகலமான தாம்பாள தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். சில்வர் தவிர எந்த தட்டாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் நிறைய உப்பை பரப்பி விடுங்கள். பரப்பிய உப்பின் நடுவில் இந்த தேங்காயை வைத்து விடுங்கள். தேங்காயை உப்பில் வைக்கும் போது ஆடாமல் அப்படியே நிற்க வேண்டும். அதற்கேற்றவாறு உப்பை தேங்காயை அனைத்த மாதிரி வைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பில் தேங்காயை வைக்கும் போது நீங்கள் உங்கள் வேண்டுதலை மனமார வேண்டிக் கொள்ளுங்கள். எனக்கு நிலம் வேண்டும், நிலத்தில் வீடு வேண்டும், அந்த வீட்டில் நிம்மதியாக குடியிருக்க வேண்டும். ஒரு வே ளை உங்களுக்கு நிலம் இருந்தால், என்னுடைய நிலத்தில் வீடு கட்ட வேண்டும் அல்லது கட்டிய வீடு பாதிலே நின்று விட்டால் அந்த வேலை மீண்டும் தொடர வேண்டும். இப்படி உங்களுக்கு என்ன தேவையோ அதை இந்த உப்பில் தேங்காய் வைக்கும் போது மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை நிலம் வாங்கி வைத்தவர்கள் வீடு கட்ட முடியாமல் இருந்தால் அந்த நிலத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கொண்டு வந்து உப்பின் மீது தேங்காய் வைக்கும் முன் அந்த இடத்தில் அந்த மணலை கொட்டி அதற்கு மேல் தேங்காய் வைத்து விடுங்கள். இந்த மணலைக் கொண்டு வருவது உப்பில் தேங்காய் வைப்பது இவை எல்லாம் நிலத்திற்கு சொந்தக்காரர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். இன்னொருவர் செய்யக் கூடாது.

- Advertisement -

இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு ஓரத்தில் வைத்து விடலாம் இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உப்பு அப்படியே இருக்கும் உப்பில் வைப்பதால் தேங்காயும் அழுகாது ஒரு வேளை உப்பு கருத்து விட்டாலோ, அல்லது தேங்காய் விரிசலோ அழுகலோ ஆனால் மாற்றிக் கொள்ளலாம் அதனால் எந்த தவறும் இல்லை அப்படி ஆகிவிட்டால் பதட்டப்படவும் வேண்டாம்.

இந்த வேண்டுதலை நீங்கள் தினமும் காலையில் பூஜை செய்தவுடன் அந்த உப்பு தேங்காய் முன் அமர்ந்து என் இடத்தில் நான் வீடு கட்ட வேண்டும் என்று உங்களுடைய அந்த வேண்டுதலை மட்டும் வைக்க தவறக் கூடாது.

- Advertisement -

உப்பானது மகாலட்சுமி வாசம் பொருந்திய பொருள் தேங்காயின் பெயரை அண்டங்காய் அதாவது அது இந்த பிரபஞ்சத்தோடு மிகவும் தொடர்புடைய ஒன்று. இதனால் தான் எந்த விசேஷத்திலும் தேங்காய் இல்லாமல் எதுவும் செய்வதில்லை. தேங்காயானது நல்ல ஆற்றலை இருக்கும் இடத்திலிருந்து பிரபஞ்சத்திடம் இருந்து நமக்கு தரும் என்று நம்முடைய எண்ணங்களை இந்த பிரபஞ்சத்திடம் கொண்டு சேர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இந்த கற்பூரத்தை ஏற்றினால் மகாலட்சுமி தாய் எந்த சூழ்நிலையிலும் உங்கள் வீட்டில் இருந்து வெளியேறவே மாட்டாள். ஏழேழு ஜென்மத்துக்கும், பணக்கஷ்டம் வராமல் இருக்க இந்த ஒரு கற்பூரம் போதும்.

நீங்கள் இந்த தேங்காய் முன் அமர்ந்து வேண்டுதலை வைக்கும் போது உங்களுடைய வேண்டுதலானது சீக்கிரம் நடந்து சொந்த வீடு அமையக்கூடிய யோகம் உங்களை விரைவில் வந்தடையும். இந்த நம்பிக்கையோடு நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து சொந்த வீட்டில் சந்தோஷமாக வாழும் யோகத்தை பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -