சொந்த வீடு கட்ட செங்கல் பரிகாரம்

murugan veedu
- Advertisement -

சொந்தமாக வீடு கட்டி வாழ வேண்டும் என்பது ஒவ்வொருவருடைய கனவு. எல்லோருக்கும் ஒரு சில விஷயங்கள் பிடிக்கும். ஒரு சில விஷயங்கள் பிடிக்காது. ஆனால் இந்த வீடு விஷயத்தில் எனக்கு சொந்த வீடு பிடிக்காது என சொல்லும் ஒரு மனிதரை கூட பார்க்க முடியாது. இது சொந்த வீட்டில் வாழ்பவர்களுக்கு கூட பொருந்தும்.

சொந்த வீட்டில் இருப்பவர்கள் மேலும் வீடு கட்டவோ நிலம்மாகவோ நிச்சயமாக ஆசைப்படுவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் அவர்களுடைய ஆசைகள் எத்தனை வலிமையானதாக இருக்கும். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஆசை மட்டும் தான் இருக்குமே தவிர அதற்கான வழி தெரியாது.

- Advertisement -

என்ன தான் நித்தமும் பாடுபட்டாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவர்களின் பொருளாதார நிலை ஒத்துழைக்காது. இப்படியானவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யும் போது நிச்சயம் பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

சொந்த வீடு நிலம் வாங்க செங்கல் பரிகாரம்

இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பாக புதிதாக ஒரு செங்கலை வாங்கி வீட்டிற்குள் கொண்டு வாருங்கள். இந்த செங்கலை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தயார் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் மலை மேல் இருக்கும் ஏதாவது ஒரு முருகர் ஆலயத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த ஆலயத்திற்கு நீங்கள் வாங்கி வைத்த செங்கலை ஒரு பையில் போட்டு கொண்டு செல்ல வேண்டும். அங்கு சென்று முருகருக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள். இதையெல்லாம் செய்ய முடியாது என்பவர்கள் எளிமையான முறையில் கூட வழிபாடு செய்யலாம். இவற்றை செய்து முடித்த பிறகு இந்த செங்கலை கையில் வைத்து வைத்துக் கொண்டு முருகர் சன்னதியை ஆறு முறை வலம் வர வேண்டும்.

அது வரை இந்த செங்கலை நீங்கள் கீழே வைக்கக் கூடாது. அதன் பிறகு ஆலயத்தில் ஏதேனும் ஓர் இடத்தில் குறைந்தது அரை மணி நேரமாவது அமர்ந்திருங்கள். அப்பொழுது நீங்கள் வீடு கட்ட வேண்டும் என்ற உங்களுடைய வேண்டுதலை முருகரிடம் மனதார கேளுங்கள். அந்த நேரத்தில் இந்த செங்கலை எடுத்து உங்கள் பக்கத்தில் தரையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது மறுபடியும் வீட்டிற்கு கிளம்பும் போது இந்த செங்கலை எடுத்து பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த செங்கலை அப்படியே பூஜை அறையில் வைத்து தினந்தோறும் முருகப்பெருமானை நினைத்து வழிபட்டு வாருங்கள். இப்படி வழிபடும் போது உங்களுடைய சொந்த வீட்டு ஆசையை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.

கையில் பணமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு கூட ஏதேனும் ஒரு வழியில் வீடு அமையக் கூடிய வாய்ப்பு உருவாகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி உருவாகும் பட்சத்தில் இந்த செங்கலை நீங்கள் கட்டும் இல்லத்தில் முதல் செங்கலாக வைத்து கட்ட வேண்டும். புதிதாக நிலம் வாங்கினாலும் அப்படி தான் இந்த செங்கல் அந்த நிலத்திற்கு சென்று விட வேண்டும். வீடு கட்டும் போது சேர்த்து கட்ட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர குபேர வழிபாடு

வீடு நிலம் போன்றவற்றுக்கு காரணம் கர்த்தாவாக இருக்கக் கூடிய செவ்வாய் பகவானுக்கு அதிபதி தெய்வம் தான் இந்த முருகப் பெருமான். அவரை இந்த முறையில் வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய சொந்த வீடு கனவு நினைவாகும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -